மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
முல்லை முல்லைப் பூ சிறத்தலால் முல்லை நிலம் எனப் பெயர்பெற்றது. முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும் என்று கூறுவர். முல்லை தொத்தி ஏறும் ஒரு செடியாகும். இஃது இயற்கையில் குறுங்காடுகளிலும் காடு சார்ந்த வெளிகளிலும் வளர்கின்றது. சங்க இலக்கியத்தில் மிகப் பல இடங்களில் முல்லையைப் பற்றிய பாடல்கள் குறுந்தொகையில், ”கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை” (குறுந்,62) ”சிறுவீ முல்லைக் கொம்பிற றாஅய்” (குறுந்,275) ”இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்” (குறுந்,220) இடம்பெற்றுள்ளன. முல்லை ஒரு கொடி என்று சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. ‘முல்லை மென்கொடி’ ‘பைங்கொடி முல்லை’ என்று அழைக்கப்படுகின்றது. முல்லைச் செடியின் புதிய கிளைகள் மென்மையாக...