Skip to main content

Posts

Showing posts from April, 2023

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

முல்லை

முல்லை           முல்லைப் பூ சிறத்தலால் முல்லை நிலம் எனப் பெயர்பெற்றது. முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும் என்று கூறுவர். முல்லை தொத்தி ஏறும் ஒரு செடியாகும். இஃது இயற்கையில் குறுங்காடுகளிலும் காடு சார்ந்த வெளிகளிலும் வளர்கின்றது. சங்க இலக்கியத்தில் மிகப் பல இடங்களில் முல்லையைப் பற்றிய பாடல்கள் குறுந்தொகையில்,           ”கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை” (குறுந்,62)         ”சிறுவீ முல்லைக் கொம்பிற றாஅய்” (குறுந்,275)         ”இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை          வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்          குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்” (குறுந்,220) இடம்பெற்றுள்ளன. முல்லை ஒரு கொடி என்று சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. ‘முல்லை மென்கொடி’ ‘பைங்கொடி முல்லை’ என்று அழைக்கப்படுகின்றது. முல்லைச் செடியின் புதிய கிளைகள் மென்மையாக...

மருதம்

  மருதம் (Lagerstroemia Flos – Regina)       சங்க இலக்கியத்தில் கூறப்படும் செடிகளுள் காந்தளைப் போல பல இடங்களிலும் பயின்று வரும் மரம் மருதமரமேயாகும் . தற்காலத்தில் பெரும்பாலோருக்கு மருதம் என்ற மரம் எதுவென்பதோ , அழகிய பூவையுடையது என்பதோ தெரியாது . ஆனால் சங்க காலத்தில் இம்மரத்தை மிகவும் நன்றாக அறிந்திருந்தனர் என்பது சங்கப் பாடல்களில் தெளிவாகத் தெரிகின்றது . தற்காலத்தில் மருது , மருதம் என்றால் உடனே ‘ அர் ஜீ னம் ’ என்ற மரத்தைத் தான் காட்டுவர் . சங்க காலத்தில் வழங்கிய அழகிய பூவையுடைய மரத்தை மறந்துவிட்டோம் . அதன் பெயரால் அழகற்ற மரத்தை , பொருத்தமற்ற மரத்தை அழைக்கிறோம் . தமிழ்நாட்டில் கருமருது , வெள்ளை மருது , கலிமருது என்று பல மருது மரங்கள் மக்களிடையே வழங்குகின்றன . இவையெல்லாம் சங்க கால மருதமரமன்று . நிகண்டு ஆசிரியர்கள் காலத்தில் சங்க கால மருதம் மறக்கப்பட்டுவிட்டது . சங்கப்பாடல்களில் கூறப்பட்ட மருத மரம் தற்போது தற்போது மிக அரிதாகச் சிலரால் ‘பூமருது’ என்று வழங்குப்படும் மரமேயாகும். பூ வழகிய மருதத்தை பூமருது   என்றும் அதன் அடிமரங்களை கருமருது, வெள்ளை மருது என்ற...

குறிஞ்சி

  குறிஞ்சி          திணைகளில் முதல் திணை குறிஞ்சி . வரலாற்று அடிப்படையில் மலைகளிலும் , காடுகளிலும் தேனும் கிழங்கும் பழமும் தேடியுண்டு வாழ்ந்த வாழ்க்கையே மனிதனின் முதல் வாழ்க்கையாதலால் குறிஞ்சித் திணையே முதல் திணையாகக் கருதப்பட்டது .           கடல் மட்டத்திற்கு மேல் ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும் . பிற செடிகளுக்கு அத்தகைய வரையறை கிடையாது . இத்தன்மையின் காரணத்தாலேயே , மலையையும் மலை சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர் . இதற்கு மற்றொரு காரணமும் உண்டு . அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும் . இச்செடியின் பூ ஒன்பது ஆண்டுகளுக் கு ஒரு முறை தோன்றி பன்னிரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து காணப்படுகின்றது . இயற்கையில் இத்தகைய வியப்பிற்குரிய பூ வேறின்மையால் மலையிலும் மலை சார்ந்த இடத்திலும் காணப்படும் இந்தப் பூவின் பெயராலேயே இந்த இடத்தை அழைத்தனர் . செடி நூலில் இச்செடி ‘ ஸ்ட்ரொபிளான்த்தெஸ் ’ (Strobilanthes) என்ற இனத்தைச் சார்ந்தது . தமிழ் நா...

சங்க கால இசைக்கருவிகள்

  சங்க கால இசைக்கருவிகள்         இசையை எழுப்பும் கருவிகள் பலவகைப்படும் . இக்கருவிகளைப் பசிய நிறமுள்ள பைகளுக்குள்ளே போட்டு கார்காலத்தில் பழுக்கும் பலாக்காய்களைப் போன்று தோளில் வைத்துச் சுமக்கும் கம்பின் இருபக்கத்திலும் பாரம் ஒத்திருக்கும்படி கட்டித் தூக்கிச் செல்வர் பாணர் ,           ” கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப           நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையர் ” – மலைபடு .12-13 இவ்விசைக் கருவிகளைத் தோற்கருவிகள் , துளைக் கருவிகள் , நரம்புக் கருவிகள் , மிடற்றுக் கருவிகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம் . யாழ்           சங்க நூல்களில் வில்யாழும் , சீறியாழும் , பேரியாழும் குறிக்கப்பட்டிருக்கின்றன .           ” ...... ..... .......   ....... குமிழின்           புழற்கோடறாத் தொடுத்த மரபுறி நரம்பின்   ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...