இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் . அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் . ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...
இலுப்பை ‘இலுப்பை’ மரத்தைச் சங்க காலத்தில் ‘இருப்பை’ என்றழைத்தனர். ஊர்ப்புறங்களில் எண்ணெய் எடுப்பதற்காகத் தோப்பாக வளர்க்கப்படுவதுண்டு. கோயில்களில் விளக்கெரிக்க இதன் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையில் இலுப்பை மரம் தென்னிந்தியக் காடுகளில் காணப்படுகிறது. வடஇந்தியாவிலும் கேரளத்திலும் மரம் சிறிது வேறுபட்டது. இலுப்பை மரங்களைச் சங்க நூல்களில், ”நீடுநிலை யரைய செங்குழை யிருப்பை” (அகம்.331) ”குதிர்க்கா லிருப்பைக் குவிகுலைக் கழன்ற” (அகம்.321) ”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து” (புறம்,384) ”கருங்கோட் டிருப்பை வெண்பூ முனையிற்” (அகம்,247) இலுப்பை மரம் உயரமாக வளரும் என்பதையே ‘நீடு நிலையரைய’ என்ற அகநானூறு குறிக்கின்றது. இலுப்பை மரத்தின் அடிமரம் பெருத்துக் காண்பதால் ...