மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
சங்கு தமிழக மக்கள் வழக்கில் குழலுக்கு முற்பட்டு இருந்த ஊது கருவி சங்கு. இது இயற்கை தந்த இசைக்கருவி. சங்க இலக்கியத்தில் வளை என்று அழைக்கப்பட்டது. சங்கின் ஒலி சங்க நாதம் என்று அழைக்கப்படும். சங்கொலி மெய்யுணர்வைத் தூண்டும் வல்லமையுடையது. சங்கினைப் பண்டைத் தமிழர் குறியீடாகவும் இறைவழிபாட்டிலும் இணைத்துக் கண்டனர். மங்கல/அமங்கல நாட்களில் ஊதப் பெற்றது. சங்கில் வலம்புரி சங்கு புனிதமாகப் போற்றப்படுகிறது. சங்கினைக் கலைஞர்கள் தம் ஆடரங்கு, பாடரங்கு, இசையரங்குகளில் பயன்படுத்தியுள்ளனர். சங்கு திருமாலிற்குரிய சின்னமாகப் போற்றப்படுகிறது. சங்கு/கோடு/வளை வலம்புரி என்று சங்க இலக்கியங்களில் பதியப் பெற்றுள்ளது. பண்டைத் தமிழ் மக்கள் இறைவழிபாட்டிவ் முருகனை வணங்கும் வழிபாட்டில் சங்கு பயன்படுத்தப் பெற்றமையைத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. ”அந்தரப் பல்லியங்கறங்கத் திண்காழ் வயி ரெழ...