வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில் இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...
சங்கு தமிழக மக்கள் வழக்கில் குழலுக்கு முற்பட்டு இருந்த ஊது கருவி சங்கு. இது இயற்கை தந்த இசைக்கருவி. சங்க இலக்கியத்தில் வளை என்று அழைக்கப்பட்டது. சங்கின் ஒலி சங்க நாதம் என்று அழைக்கப்படும். சங்கொலி மெய்யுணர்வைத் தூண்டும் வல்லமையுடையது. சங்கினைப் பண்டைத் தமிழர் குறியீடாகவும் இறைவழிபாட்டிலும் இணைத்துக் கண்டனர். மங்கல/அமங்கல நாட்களில் ஊதப் பெற்றது. சங்கில் வலம்புரி சங்கு புனிதமாகப் போற்றப்படுகிறது. சங்கினைக் கலைஞர்கள் தம் ஆடரங்கு, பாடரங்கு, இசையரங்குகளில் பயன்படுத்தியுள்ளனர். சங்கு திருமாலிற்குரிய சின்னமாகப் போற்றப்படுகிறது. சங்கு/கோடு/வளை வலம்புரி என்று சங்க இலக்கியங்களில் பதியப் பெற்றுள்ளது. பண்டைத் தமிழ் மக்கள் இறைவழிபாட்டிவ் முருகனை வணங்கும் வழிபாட்டில் சங்கு பயன்படுத்தப் பெற்றமையைத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. ”அந்தரப் பல்லியங்கறங்கத் திண்காழ் வயி ரெழ...