Skip to main content

Posts

Showing posts from August, 2023

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

சங்கு

  சங்கு           தமிழக மக்கள் வழக்கில் குழலுக்கு முற்பட்டு இருந்த ஊது கருவி சங்கு. இது இயற்கை தந்த இசைக்கருவி. சங்க இலக்கியத்தில் வளை என்று அழைக்கப்பட்டது. சங்கின் ஒலி சங்க நாதம் என்று அழைக்கப்படும். சங்கொலி மெய்யுணர்வைத் தூண்டும் வல்லமையுடையது. சங்கினைப் பண்டைத் தமிழர் குறியீடாகவும் இறைவழிபாட்டிலும் இணைத்துக் கண்டனர். மங்கல/அமங்கல நாட்களில் ஊதப் பெற்றது. சங்கில் வலம்புரி சங்கு புனிதமாகப் போற்றப்படுகிறது. சங்கினைக் கலைஞர்கள் தம் ஆடரங்கு, பாடரங்கு, இசையரங்குகளில் பயன்படுத்தியுள்ளனர். சங்கு திருமாலிற்குரிய சின்னமாகப் போற்றப்படுகிறது. சங்கு/கோடு/வளை வலம்புரி என்று சங்க இலக்கியங்களில் பதியப் பெற்றுள்ளது.           பண்டைத் தமிழ் மக்கள் இறைவழிபாட்டிவ் முருகனை வணங்கும் வழிபாட்டில் சங்கு பயன்படுத்தப் பெற்றமையைத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது.           ”அந்தரப் பல்லியங்கறங்கத் திண்காழ்              வயி ரெழ...

மனுநீதி சோழன்

  மனுநீதி சோழன்             மனுநீதி கண்ட சோழன் பழமொழி இலக்கியத்தில் கூறப்படுகின்றது. குற்றவாளிக்கு மன்னிப்பில்லை. அவன் மீதுள்ள வழக்கிற்குக் காலக் கெடு கிடையாது.குற்றவாளியின் மேல் குற்றம் எவ்வளவு காலம் கழித்து வெளிப்பட்டாலும் அவனைத் தண்டிக்கலாம். இதற்கு உதாரணமாக மனுநீதி சோழன் வரலாறு சொல்லப்படுகிறது. பெரியபுராணத்தில் கூறப்படும் மனுநீதி சோழன் வரலாற்றுக்கும் பழமொழியில் சொல்லப்படும் இவ்வரலாற்றுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது. பெரியபுராணத்தில் கூறப்படும் மனுநீதி சோழன் வரலாறு           மனுநீதி சோழன் திருவாரூரிலே அரசாட்சி செய்தவன். அவன் மகன் வீதிவிடங்கன் ஒரு நாள் தேரில் ஏறிக் கொண்டு போனான். அப்போது ஒரு பசுங்கன்று துள்ளி ஓடிவந்து அவனுடைய தேர்ச்சக்கரத்திலே மாட்டிக்கொண்டு மாண்டது. அதைக் கண்ட தாய்ப்பசு துக்கந் தாங்க முடியாமல் அரண்மனை வாயிலை யடைந்தது. ஆராய்ச்சி மணியைக் கொம்பினால் ஆட்டியது. அந்த மணியோசை கேட்ட மன்னவன் வெளியில் வந்தான். பசுவின் துயரைக் கண்டான். உடனே மந்திரிகளை அழைத்து உண்...

நவராத்திரி விழா

  நவராத்திரி விழா           மூன்று மூர்த்திகள், நான்கு வேதங்கள், ஐம்புலன்கள், ஆறு சாஸ்திரங்கள், பதினான்கு உலகங்கள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் என்று வகுத்த நம் முன்னோர்கள்: கலைகள் அறுபத்தி நான்கு என குறிப்பிட்டுள்ளார்கள். ·         நவராத்திரி விழாவே ஒரு கலை விழாதான். கொலு வைக்கும் மங்கையரின் நுண்ணறிவை வியக்க வைக்கிறது. ·         ஒன்பது நாட்கள் இரவில் வீட்டையே கோயிலாக்கித் தெய்வீகம் தவழும் திருவிடமாக்கித் திகழும் மகளிர்க்கு இவ்விழாவில் பங்குண்டு. ·         இந்த ஒன்பது நாட்களும் காலையில் நீராடி வழிபாடு நடத்துவதுடன்; ஒவ்வொரு நாளிலும் கன்னிப் பெண்களை (2 வயது முதல் 10 வயது வரை) கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்கா, சயத்திரா, குமாரி, திரிமூர்த்தி என்ற இறைவனின் கூறுபாடுகளாகப் பாவித்து வணங்கி, உணவு உடை, அணிகலன்கள் முதலியன வழங்க வேண்டும். ·         அவ்வாறு இயலாதவர்கள் லலித சகஸ்ர நாமம்,...

ஆவணி அவிட்டம்

  ஆவணி அவிட்டம்           பூணூலை வருடத்திற்கு ஒரு மாற்றுவதற்காக ஏற்பட்ட பண்டிகையே ஆவணி அவிட்டம். அதாவது தாலி பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள். ஒருவனுக்கு உரிமையானவள் என்பதையே உணர்த்துகிறது. இத்தாலி அன்றும் இன்றும் வடிவங்கள் வந்துள்ளதே தவிர, கழுத்தில் ஏதோ ஒரு வடிவில் இருந்திருக்கிறது.            எனவே தாலி என்பது பெண்களின் கழுத்தில் இருந்து அவர்களை அடையாளங் காட்டிற்றோ அதே போல் ஆடவரையும் பல்வேறு நிலைகளில் இனங்காட்டிட இந்தப் பூணூல் அணியப்பட்டது.           தாலி அணிந்த பெண்கள் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்னும் எல்லை வகுத்த்தோ, அதே போல் பூணூல் அணிந்தவர்கள் பிறரிடம், பிறர் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதே இப்பூணூலின் முதற் பெருமை.           நம் முன்னோர்கள் விருந்தோம்தலில் மிகவும் விருப்பம் உடையவர்கள். அதே சமயம் வாணிபம், கல்வி, தூது, நிமித்தமாக ஊர்விட்டு ஊ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...