Skip to main content

Posts

Showing posts from April, 2024

என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1

                                                                   என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1           Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக  வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும்  தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.        மாற்றி யோசி!   புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்!   தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ச...

பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள்

  பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள்         அணைகளை உருவாக்கியது முதல் இந்திய ரூபாயின் பிரச்சனைகளை ஆராய்ந்தது வரை அம்பேத்காருக்குப் பல முகங்கள் இருந்தாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.         இந்தியாவில் நிலவி வந்த சாதீயக் கொடுமைகளுக்கு எதிராகப் தனது இறுதி மூச்சு வரைப் போராடியவர் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். அவர் சட்ட மாமேதை மட்டுமல்ல. அரசியல் வித்தகர், பொருளாதார மாமேதை, தத்துவ ஞானி, சட்ட வல்லுநர், தலைசிறந்த எழுத்தாளர்,   சமூக நீதிச் சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட மாமேதை எனலாம். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, பிரெஞ்சு, பெர்ஷியன், ஜெர்மன், பாலி எனப் பல மொழிகளும் கற்றறிந்த வித்தகர்.           கல்வியே ஒருவருக்கு மதிப்பையும் வளத்தையும் அளிக்கும் என்று உறுதியாக அம்பேத்கர் கொண்ட எண்ணமே, ஒன்பது வெளிநாட்டு, பன்னிரண்டு இந்திய பட்டங்களை அவர் பெறக் காரணமாக இருந்தது. ·  ...

தமிழ் இலக்கியங்களில் மழை நீரின் முக்கியத்துவம்

  தமிழ் இலக்கியங்களில் மழை நீரின் முக்கியத்துவம்           தமிழ் நாட்டின் இயற்கை அமைப்புப் பெரும்பாலும் மழை நீரினை நம்பி உள்ளது . மழை நீர் இல்லையேல் இயற்கை வளம் இல்லை . உயிர்களும் இல்லை . தமிழ் இலக்கியங்கள் மழைநீரின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து உணர்த்தி வருகின்றன . நீரின் சிறப்பையும் வானத்தில் இருந்து பெய்யும் மழையின் இயக்கத்தையும் முல்லைப்பாட்டில் ,                  ” நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு                   வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை                 நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்                 பாடிமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு                 கோடு கொண்டெழுந்த கொடுஞ்ச...

தன்னலமற்ற அன்பு

  தன்னலமற்ற அன்பு           அன்புக்கும் தன்னலத்திற்கும் தொடர்பு உண்டு. அன்பு குறையக் குறைய தன்னலம் பெருகும். அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். தன்னலமற்றவர்கள் தம் உயிர் வாழ்க்கைக்குக் காரணமான உடம்பில் உள்ள எலும்பும் பிறர் நன்மைக்காக இருப்பதாகவே கருதுவார்கள். இவர்கள் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள்.           ”அன்பிலார் எல்லாம் தமக்குரியவர் அன்புடையார்              என்பும் உரியர் பிறர்க்கு” (குறள், 72) என்பது வள்ளுவம்.           பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்கு வாழை மரத்தைச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். வாழைமரம் குலை விடுகின்றவரை வாழ்கின்றது. பின்பு வீழ்கின்றது. அஃது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வருகின்றது. அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும் தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்ற...

நீர் வளமும், நிலவளமும்

    நீர் வளமும், நிலவளமும்           உலக மக்களின் அடிப்படைத் தேவைகளில் நீர் வளமும், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்திடும் நிலவளமும் முக்கியமானது. நீரின் மிகையினை வீணாக்காமற் பாதுகாத்து உரிய காலத்தில் நிலப் பகுதிகளுக்கு அளிக்கும் போது நிலம் செழிக்கின்றது. மக்களும் செழிக்கின்றனர். ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்த முடியும். சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் புறநானூற்றுப் பாடலில் நீர் வளத்தையும், நிலவளத்தையும் இணைத்துக் கூறுகின்றார்.           நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்         உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே         உண்டி முதற்றே உணவின் பிண்டம்         உணவெனப்படுவது நிலத்தோடு நீரே         நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு         உடம்பும் உயிரும் படைத்திசினோரே” (புறம்,18) என்று மனித உடலுக்கு உயி...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...