கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள் அணைகளை உருவாக்கியது முதல் இந்திய ரூபாயின் பிரச்சனைகளை ஆராய்ந்தது வரை அம்பேத்காருக்குப் பல முகங்கள் இருந்தாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். இந்தியாவில் நிலவி வந்த சாதீயக் கொடுமைகளுக்கு எதிராகப் தனது இறுதி மூச்சு வரைப் போராடியவர் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். அவர் சட்ட மாமேதை மட்டுமல்ல. அரசியல் வித்தகர், பொருளாதார மாமேதை, தத்துவ ஞானி, சட்ட வல்லுநர், தலைசிறந்த எழுத்தாளர், சமூக நீதிச் சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட மாமேதை எனலாம். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, பிரெஞ்சு, பெர்ஷியன், ஜெர்மன், பாலி எனப் பல மொழிகளும் கற்றறிந்த வித்தகர். கல்வியே ஒருவருக்கு மதிப்பையும் வளத்தையும் அளிக்கும் என்று உறுதியாக அம்பேத்கர் கொண்ட எண்ணமே, ஒன்பது வெளிநாட்டு, பன்னிரண்டு இந்திய பட்டங்களை அவர் பெறக் காரணமாக இருந்தது. · ...