Skip to main content

Posts

Showing posts from August, 2024

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

பாண்டவர்கள்

  பாண்டவர்கள்           சூரிய பகவான் குந்தி தேவியிடம் கூறியதைப் போல அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அவளை மணந்து கொள்ள பல அரசகுமாரர்கள் போட்டியிட்டார்கள். பின்னர், சுயம்வர முறைப்படி குந்திதேவி பாண்டுராஜனை மலர் மாலை சூடி தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்.           மணமக்கள் அஸ்தினாபுரம் சென்றடைந்து சிறந்த முறையில் வாழ்ந்து வந்தார்கள். இவ்விதமிருக்க, பாண்டு மகாராஜா ”மாத்ரி” என்ற இளவரசியை மணந்து கொண்டார்.           பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ளவன். அங்கே ஒரு ஆண்மானும் பெண்மானும் காதல் விளையாட்டில்   ஈடுபட்டு விளையாடி கொண்டிருந்தன. அந்த மான்களின் மீதுகுறிவைத்து அம்பு எய்தவும் ஆண்மான் மீது அம்பு பட்டது. ஆண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் உருவம் வெளிப்பட்டது. பின்னர் பெண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் மனைவி வெளிப்பட்டாள்.           அம்பு தைத்த வலி பொற...

பீஷ்மர்

  பீஷ்மர்           அழகியென்றால் அவள்தான் அழகி . அவளைப் போன்ற ஒரு அழகிய பெண்ணை எங்குமே கண்டதில்லை . ஆம் , அவன் – சந்தனு மகாராஜா ! எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறான் . எத்தனை எத்தனையோ அரசிளங்குமரிகளை அவன் பார்த்திருந்தாலும் அவன் கண்ட அந்தப் பெண்ணைப் போல சந்தனு மகாராஜா எங்குமோ அதாவது இந்த வையத்தில் பார்த்ததே இல்லை .           அவன் அவளை – அந்த அழகரசியைப் பார்த்த பின்னர் உண்மையில் திகைத்துதான் போய்விட்டான் . அவள் உண்மையில் மனித குலத்தில் பிறந்தவளா அல்லது தேவலோகத்துக் கன்னியர் என்பார்களே , அவர்களில் ஒருத்தியா என்று அவன் பெரிதும் சந்தேகம் கொண்டான் .           அவள் யாராக இருந்தால்தான் என்ன ? அவளை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் . அவளை அடையா விட்டால் அவனால் இந்த உலகில் வாழவே முடியாது என்று ஒரு நிலைமை . எனவே தயங்காமல் கூறிட அவன் திட்டமிட்டான் . அவளை அவன் நெருங்கிவிட்டான் .           சந்தனு மகாராஜா அந்த ...

தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகளாக...

  தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகளாக...           ஒரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று அனைத்தையும் புறந்தள்ளி, முன்னோர்களின் வாழ்க்கையை வழிகாட்டியாகவும், அவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றியும் வாழ்ந்தால் நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும். சங்க காலத்தில் எவ்வித பாகுபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் மன்னராட்சி முறையில் நம் முன்னோர்கள் பொற்காலமாக வாழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியலாம். ஆனால் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு சிறப்பாக வாழ்ந்ததற்கு என்ன அடையாளம் வைத்துள்ளோம்?...           தற்பொழுது நான் வாசித்தப் பெரியாரின் சிந்தனைகளில் என் மனதில் பதிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   ·         ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதையைக் கற்றுக் கொள்ளவேண்டும். மானம், ஆண்மை என்ன என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நமது கல்வி   முறையில் படிக்கும் பொழுது தொழிலும் பயில...

நம் நிழல் கூட நமக்கு உதவாது?

  நம் நிழல் கூட நமக்கு உதவாது ?             ஒரு பெரிய பணக்காரன் , வல்லவன் , பலசாலி , நான் தான் எல்லாம் என்றும் , தனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்தில் அலைந்து திரிபவன் . இவன் ஒரு நாள் குருவைக் காண்பதற்கு வந்திருந்தான் . அவரிடத்தில் அந்த செல்வந்தன் , குருவே ! என்னிடத்தில் எல்லா செல்வமும் இருக்கிறது . என் உடலில் பலமும் நன்றாக இருக்கிறது . நான் யாரையும் சார்ந்து வாழ்ந்திட வேண்டிய அவசியம் இல்லை . எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை . என் கடமைகளையும் , என்னால் முடிந்த பல புண்ணியங்களையும் செய்திருக்கிறேன் . என்னிடம் அனைத்தும் இருக்கும் நான் ஏன் கடவுளை வழிபடவேண்டும்? அதனால் கால விரயம் என்று நான் நினைக்கின்றேன் என்றான். குருவிடம் அந்த பணக்காரன்.           குரு, அப்படியா? சரி, நான் சொல்கின்ற அன்று நீ என்னோடு வர முடியுமா? என்று கேட்டார். வருகின்றேன் என்றான் பணக்காரன். சரி என்று ஒரு நாளை குரு சொல்ல, அந்த நாளில் இருவரும் புறப்பட்டுப் போனார்கள். போன இடம் பாலைவனம்.      ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...