மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
‘கவிஞாயிறு தாரா பாரதி’ அவர்களின் பிறந்த தினம் (26.02.2025) இன்று அவரைப் பற்றி பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கவிஞர் தாரா பாரதி பிறந்த ஊர் மற்றும் பெற்றோர்கள் கவிஞர் தாராபாரதி அவர்கள் 1947- ஆம் ஆண்டு , பிப்ரவரி மாதம் 26- ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவளை என்ற சிற்றூரில் பிறந்தார் . பெற்றோர் - துரைசாமி - புஷ்பம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கவிஞர் தாரா பாரதியின் இளமைப் பருவம் மற்றும் பள்ளிப்படிப்பு · தொடக்கக் கல்வியை குவளையில் பயின்றார் , உயர் கல்வியை கீழ்க்கொடுங்காலூரில் நிறைவு செய்தார். · இளங்கலை வரலாறு , முதுகலையில் தமிழிலும் பட்டம் பெற்றார். · ஆசிரியர் பயிற்சியினை ராணிப்பேட்டைய...