Skip to main content

கென்டக்கியில் உள்ள ரெட் ரிவர் கோர்ஜில் சென்ற அனுபவங்களாக…

 

கென்டக்கியில் உள்ள ரெட் ரிவர் கோர்ஜில் (kentucky – Red River Gorge) சென்ற அனுபவங்களாக…

          மே மாதம் 4 ந் தேதி நானும் என் மகள், மருமகன், பெயர்த்தி  என்று அனைவரும் சின்சினாட்டியின் பக்கத்து மாநிலமான கென்டக்கியில் உள்ள ரெட் ரிவர் கோர்ஜி என்ற மலைக்குச் சென்றோம். சுமார் 2 மணிநேரம் காரில் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தோம். முதலில் ரெட் ரிவர் கோர்ஜில் என்ற மலைக்குத் தான்  சென்றோம்.

ரெட் ரிவர் கோர்ஜில் (kentucky – Red River Gorge)










            ரெட் ரிவர் கோர்ஜ் (kentuchy – Red River Gorge) என்பது அமெரிக்காவின் கிழக்கு – மத்திய கென்டக்கியில் உள்ள ரெட் ரிவரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு அமைப்பாகும். புவியியல் ரீதியாக இது பாட்ஸ்வில் எஸ்கார்ப்மென்ட்டின் ஒரு பகுதியாகும். இந்தப் பள்ளத்தாக்கு டேனியல் பூன் தேசிய வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. பின்னர் ரெட் ரிவர் கோர்ஜ் புவியியல் பகுதி என்று பெயரிடப்பட்டது. இது 29,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது ஒரு தேசிய இயற்கை அடையாளமாகவும் தேசிய தொல்பொருள் மாவட்டமாகவும் நியமிக்கப்பட்டது. இந்த பள்ளத்தாக்கு அமைப்பில் ஏராளமான உயரமான மணற்கல் பாறைகள், பாறை முகாம்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை பாலங்கள் உள்ளன.   அதன் கரடுமுரடான தன்மை காரணமாக, ரெட் ரிவர் கோர்ஜ் குறிப்பிடத்தக்க பல்வேறு சுற்றுச்சூழல் மண்டலங்களைக் கொண்டுள்ளது. 

    இந்த பாலத்தைப் பார்வையிட பல வழிகள் உள்ளது. ROPE CAR, நடந்து செல்லும் ஒற்றை வழி பாதை, என்று இருக்கிறது. நாங்கள் Rope Car ல் இருவர் இருவராக பயணம் செய்தோம். கொஞ்சம் பயமாக இருந்தது. மலை ஏறும்போது அதிக பயமாக இருந்தது. எனக்கு போகாமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் கூட எழுந்தது. ஆனால் அங்கு சென்ற போது அந்த இயற்கையில் அமைந்த மலையின் அழகையும், இயற்கையாக அமைந்த பாலம் கண்டு வியந்தேன். மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அழகை கண்டு மகிழ்ந்து Rope car – ல் இறங்கும் பொழுது பயம் இல்லை. எங்கள் பெயர்த்தி சாராவும் சமர்த்தாக வந்து இயற்கையை ரசித்தது. மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

நிலத்தடி சுரங்கப்பாதை (Gorge Underground)

          

        Gorge Underground என்பது 100 ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புச் சுரங்கமாகும். இது இயற்கையாக பல இடங்களிலிருந்து சுரங்கத்திற்குள் விழும் ஒரு நிலத்தடி நீரூற்றால் நிரப்பப்படுகிறது. கென்டக்கியின் ரோஜர்ஸில் அமைந்துள்ள ஒரு அற்புதமான சுரங்கமாகும். இந்த சுரங்கத்தினுள் சுற்றிவர சுமார் ஒரு மணிநேர பயணமாக மேற்கொள்ளலாம். சுற்றுப்பயணத்திற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொடுப்பார்கள். டூர் ஆபரேட்டர் நமக்கு ஒரு கடினமான தொப்பி, ஒரு லைஃப் ஜாக்கெட் மற்றும் ஹெல்லேம்ப் வழங்குவார்கள்.

        குகைக்குள் குளிர் அதிகமாக இருந்தது. அங்கு செல்லும் பொழுது அந்த படகு ஓட்டுபவர் அவற்றைப் பற்றிய விளக்கங்களை ஆங்கிலத்தில் கூறினார்.  அந்த சுரங்கத்தில் உள்ள நீரில் பாசான் எதுவும் வராது. ஏனென்றால் சூரிய ஒளி படாத இடத்தில் சுரங்க நீர் இருப்பதால் எந்த கழிவும் இருக்க வாய்ப்பில்லை. அங்கு ஒரு சில இடங்களில் மீன்கள் வளர்க்கிறார்கள். அதற்குரிய உணவினை அவர்கள் தான் போடுவார்களாம்.   அந்த இடத்தில் மக்கள் தண்ணீரில் விழுந்தாலும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் அனைத்தும் வழிகாட்டிகளும் மீட்புப் பயிற்சியுடன் பொருத்தப்பட்டுள்ளனர்.

நிறைவாக,

            நாங்கள் பார்த்த இரண்டு இடங்களும் மிகவும் அருமையான இடங்களாக இருந்தது. ரெட் ரிவர் கோர்ஜில் (kentuchy – Red River Gorge) என்ற மலைப் பகுதிக்கு சென்ற இடத்தில் ஒரு கடை கூடக் கிடையாது. அங்கு செல்பவர்கள் தமக்கு தேவையானதை எடுத்துச் சென்று உண்டார்கள். கீழே எந்த ஒரு காகிதம், குப்பைகள் என்று எதையும் போடவில்லை. இயற்கையை பாதுகாப்பதோடு, அங்கு வாழும் உயிரினங்களின் பாதுகாப்பும் முக்கியம் என்று மக்கள் கவனமாக தூய்மையுடனும், பொறுப்புடனும் அங்கு வந்த சுற்றுலா வந்த மக்கள் செயல்படுகிறார்கள். அதைக் கண்டு வியப்பாக இருந்தது.

           

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...