Skip to main content

சின்சினாட்டியில் எனது வாழ்க்கை அனுபவங்களாக…

 

சின்சினாட்டியில் எனது வாழ்க்கை அனுபவங்களாக…

 

           சின்சினாட்டியில் 02.05.2025 முதல் 08.05.2025 என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இங்கு Harpers Point drive Appartment (beautiful resort-style Cincinnati community) என்ற காலனியில் தான் என் மகள் குடும்பம் வசிக்கிறார்கள். எங்கள் குடும்பம் திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். அதிக காற்றோட்டம் வசதி இருக்காது. ஆனால் இங்கு நான்கு வீடுகள் கொண்ட அமைப்பாக வீடுகள் அமைத்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் இடையில் இடவசதி, JIM, YOGA, SWIMMING POOL ,Car Parking, Fire Safty வாக்கிங் செல்வதற்கு நல்ல காற்றோட்டமான இடவசதி அமைத்து கட்டியுள்ளார்கள். இயற்கையோடு அமைத்து மரங்கள், செடிகள், மூன்று இடங்களில் குளம் போன்று அமைத்து நீர் எப்பொழுதும் தூய்மையாக வைத்து நன்றாகப் பராமரிக்கிறார்கள். மேலும்  எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் விளையாடவும், வாக்கிங் செல்வதற்கும் ஏற்றவகையில் அமைத்துள்ளார்கள்.


                   

   



Harpers Point Appartment -ல் எடுத்தப் புகைப்படம்

 இங்கு வந்த நாள் முதல் நான் தினந்தோறும் நடைபயிற்சி செல்கிறேன். மிகவும் மனதிற்கு இதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இங்கு உள்ளவர்கள் மொழி பிரச்சனை என்றாலும் Hi. சிறு கையசைப்பு, புன்னகை என்று பகிர்ந்து கொள்கிறார்கள். ஆகையால் எனக்கு மனநெருடல் இல்லாமல் நடைபயிற்சி செய்கிறேன். இங்கு மரம், செடிகளை நன்கு பராமரிக்கிறார்கள். மேலை நாடுகளில் போக்குவரத்துச் சாலை போடும் பொழுது சாலை நடுவில் ஒரு மரம் இருந்தால் கூட அதை வெட்டாமல் சாலை அமைக்கிறார்கள். ஒரு நாட்டில் (நாட்டின் பெயர் தெரியவில்லை) மேம்பாலம் கட்டும் பொழுது அங்குள்ள ஒரு வீட்டினர் மட்டும் வீட்டை இடிக்க அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அந்த வீடு மட்டும் மேம்பாலத்திற்கு நடுவில் குடி இருப்பார்கள். மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு அளித்து அதை செய்துள்ளார்கள்.

எந்த நாடாக இருந்தாலும் அதை ஆளும் அரசு அங்கு வாழும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். என்பதற்கு அந்த நாடு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. சின்சினாட்டியிலும் நாம் நடக்கும் பொடுது கார் வந்தால் நமக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் கடந்து சென்ற பிறகு அவர்கள் காரை எடுக்கிறார்கள். அதுபோல் பள்ளி பேருந்து, மாலை நேரம் போன்ற போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் குறிப்பிட்ட கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். பொதுமக்களும் நன்கு கடைபிடிக்கிறார்கள்.

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் முறைகள்

          சின்சினாட்டியில் நான் பார்க்கும் இடங்களில் கட்டிடங்கள் இல்லாமல் பிற இடங்களில் வெறும் மண்தரையே நான் பார்க்கவில்லை. சிமெண்ட ரோடு, அல்லது புல்தரை தான் அமைத்துள்ளார்கள். சிங்கப்பூர், மலேசியா அமெரிக்காவில் சின்சினாட்டி போன்ற நாடுகளில் பரப்பளவு, மக்கள் தொகை ஓரளவு குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள், பராமரிப்பு செய்ய முடிகிறது. மரங்கள், செடிகள் உள்ள பகுதிகளில் தழைக்கூளம் என்று மரத்தூள் போன்று போடுகிறார்கள். இவை மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து மண்ணின் வளம் மற்றும் ஆராக்கியத்தைப் பாதுகாக்கிறது.  

தழைக் கூளங்களின் பயன்கள்

துண்டாக்கப்பட்ட மரம் தழைக்கூளமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை தழைக்கூளம் அழகியல் காரணங்களுக்காக அடிக்கடி சாயமிடப்படுகிறது.பைன் ஊசிகள் தழைக்கூளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தெற்கு அமெரிக்காவில் பைன்ஸ்ட்ராஎன்றும் அழைக்கப்படுகிறது.

·   தழைக் கூளங்கள் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, மண்ணின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், களை வளர்ச்சியை அடக்குதல் மற்றும் அழகியல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

·          மண் மேற்பரப்பில், மரங்கள், பாதைகள், மலர் படுக்கைகள், சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க மற்றும் பூ மற்றும் காய்கறி பயிர்களுக்கு உற்பத்தி செய்யும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

·         தழைக்கூளம் அடுக்குகள் பொதுவாக 2 அங்குலங்கள் (5.1 செமீ) அல்லது அதற்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போது ஆழமாக இருக்கும்.

·         தழைக்கூளம் நேரடியாக மண்ணைத் தாக்கும் மழையைத் தடுக்கிறது, நீர்த்துளிகளின் தாக்கத்தைக் குறைக்கிறது. நீர் படிப்படியாக மண்ணில் ஊறவைக்கிறது, மாறாக மண்ணைக் கழுவுகிறது. 

நிறைவாக,

            என்னுடைய விடுமுறை எனக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிகமான அனுபவங்கள், பிறரிடம் நடந்து கொள்ளும் முறைகள், தனித்துவமாக செயல்படுதல், தன்னம்பிக்கையுடன் இருத்தல், ஆரோக்கியமாக நம்மை பாதுகாத்தல் , இங்கு சிறு குழந்தைகள் என்றாலும் அவர்களே அவர்களின் வேலைகளை செய்து கொள்ளுதல், போன்று இது ஒரு புதிய அனுபவமாக எனக்கு உள்ளது.

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...