Skip to main content

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

  சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...           சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.           மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு           புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

 

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

          சேலம், மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம், செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா (29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும், மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.

          மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.





புத்தக வெளியீட்டு நிகழ்வு

          புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்று காலை திருச்சியிலிருந்து காலை 8 மணிக்கு நானும் என் தம்பியும் கிளம்பினோம். சௌடேஸ்வரி மகளிர் கல்லூரிக்கு காலை 10.30 மணிக்குச் சென்றோம். முப்பெரும் விழா என்பதால் அனைவரும் வருவதற்கு சற்று தாமதம் ஆனது. எனவே 11.30 மணி அளவில் தொடங்கியது.



          முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கி, சிறப்பு அழைப்பாளர்கள் உரை முடிந்தவுடன் முதலில் பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. நாங்கள் மதியம் நல்ல சூடான உணவு கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு வந்தோம். இன்றைய நிகழ்வு மிகவும் அருமையாகவும், மனநிறைவாகவும் அமைந்தது.

குணசீலம் ( பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)


குணசீலம் பெருமாள் கோயில் 5000 ஆண்டுகள் பழமையானது. இது அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு பெறச் செய்யவும் உதவுகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், பக்தர்களைத் தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும், அவர்களின் உள்ளத்திலும் மனத்திலும் நேர்மறை ஆற்றலை ஊட்டுவதாகவும் நம்பப்படுகிறது.

சேலத்திலிருந்து வரும்போது 4.30 மணிக்கு குணசீலத்திற்கு வந்தோம். கோவில் அப்பொழுதான் திறந்தார்கள். அனுமதி கட்டணம் மிகவும் குறைவு. நான் இன்றுதான் முதலில் அந்த கோயிலுக்குச் சென்றேன். மிகவும் பழமையான கோவில். வேலை நடந்து கொண்டிருந்தது. சாமியைப் பார்த்துவிட்டு வந்தோம்.

நிறைவாக,

          இன்றைய நாள் (29.03.2026) மிகவும் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது. நான் இதுவரை என்னுடைய நூல்களை பதிப்பகத்தில் கொடுத்து வெளியிடுவேன். ஆனால் நூல் வெளியீட்டு நிகழ்வாக எதிலும் பங்குபெற்றதில்லை. சமீபத்தில் வெளியிட்ட 5 நூல்களையும் திருவையாறு ஔவை அறக்கட்டளையிலும், சேலம் மகிழம் சங்கத்திலும் வெளியிட்டு வருகிறேன். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. புதிய அறிமுகமும், இன்னும் அதிகமாக எழுதவேண்டும் என்ற ஆர்வமும் எழுகிறது. மனநிறைவாகவும் உள்ளது.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...