Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்!

                                                                   என் எண்ணச் சிதறல்கள்!           Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக  வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும்  தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.        மாற்றி யோசி!   புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்!   தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் சரியின் சந்தர...

என் எண்ணச் சிதறல்கள்!

                                                     என் எண்ணச் சிதறல்கள்!

          Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக  வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும்  தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.  

 

  •   மாற்றி யோசி!

 

புலியிடம் பகையென்றால்

நரியிடம் நட்பு தொள்ளாதே!

உனக்கு உயர்வில்லையென்றால்

மலைமீது கற்களை விட்டெறியாதே!

வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால்

சாவிடம் யோசனை கேட்காதே!

உனது இன்ப துன்பத்தின் திறவுகோல்

உன்னிடமே இருக்கிறது!

திறந்து அனுபவிப்பது

உனது மனநிலையைப் பொறுத்தது!

மாற்றி யோசி!

மாற்றம் என்பது நிலையானதல்ல!


  • சந்தர்ப்பம்!

 

தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில்

ஏதாவது ஒரு தவறில்

சரியின் சந்தர்ப்பம் அமைய

வாய்ப்புகள் இருக்கலாம்!

  •   நிம்மதியே வாழ்க்கை!

 

நிலைத்தக் கல்வியும்

நிலையான வேலையும்

அறநெறி வாழ்வும்

இணையும் பொழுது

நிம்மதியாகும் வீடு!


  • அனுபவமே வாழ்க்கை!

 

துளையிடும் மூங்கிலே

புல்லாங்குழலாகிறது!

மிதிபடும் மண்ணே

பானையாகிறது!

அனுபவப்படும் மனமே

பக்குவமாகிறது!


  • ஆசிரியர்கள்!

 

கல்லை வைரமாக்கும்

அறிவுச் சித்தர்கள்

ஆசிரியர்கள்!


  • வாய்ப்புகள்!

 

சிலருக்குத் தேடி வரும்!

சிலர் தேடினாலும் வராது!


  • யார் நல்லவர்?

 

கொடுப்பவர் நல்லவர்!

நன்மை செய்பவர் நல்லவர்!

தீமைகளைப் பொறுப்பவர் நல்லவர்!


  •     தோல்வி!

தோல்வி
ஒரு செயலின் முடிவு!

செயலை மேற்கொள்பவரின் முடிவு அ்ல்ல!

  • முயற்சி!

 

முயற்சியின் முடிவு வெற்றிதான்- அதற்கு

தோல்வி என்பதே இல்ல


  •  உறவே உயர்வு!

 

மனம் அன்பாய் மலர

இனியது சொல்லாய் மாறும்!

விருந்தால் அகம் மகிழ

உறவு உயர்வாய் பெருகும்!

சுற்றம் பெருகி வாழ

அறத்தோடு அன்பு நீளும்!

  •    வாழ்க்கை!

பெரியோரின் துணை

முதலீடு போன்றது!

வியாபாரம் போன்றது

வாழ்க்கை!

  •         நூலகம்!

வாசிக்கும் எண்ணம் இருந்தால்
நேசிக்கும் எண்ணம் தானே வளரும்!

  •          அமைதி!

கெடுமதியைக் கைவிட மனமிலார்க்கு
கிட்டாதே மன அமைதி!

  • நட்பு!

முட்டாள்களின் நட்பை விட

புத்திசாலிகளின் பகையே மேல்!

  •     எவை மேலானவை!

தானம் செய்வதை விட
இனிமையான சொற்கள் மேலானவை!

  •          நாவடக்கம்!

நாவடக்கம்
சொல்லுக்கும் மட்டுமல்ல!

உணவுக்கும் அவசியம்!

  •         பொங்கல் தின வாழ்த்துகளாக...

உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து
உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று

உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு

பாரோர் போற்றும் பண்பு பெற்று

இடும்பை இல்லா இன்பம் போற்றி

நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம்!

  •        அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

உயிர்காக்கும் உணவை தரும்
உழவர்க்குத் திருநாள்!

நான் என்னும் எண்ணம் இன்றி

நாம் எனும் உறவுகள் யாவும்

கூடி மகிழும் நாள்!

பொங்கள் திருநாள்!

  •  அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளாக...

அன்பில் தொடங்கி
ஆனந்தத்தில் முடியட்டும்!

புன்னகையில் தொடங்கி

மகிழ்ச்சியில் முடியட்டும்!

சிந்தனையில் தொடங்கி

செயலில் முடியட்டும்!

துன்பங்கள் நீங்கி

இன்பங்கள் பிறக்கட்டும்!

  •        விதைத்தது விளையும்!

தடுமாறா நல் மனதால்
ஆற்றல் பெருகும்!

மனமதை அடக்கினால்

அறம் பல குவியும்!

இன்சொல் ஆற்றலால்

உறவுகள் பலபடும்!

அறியாது வந்த விருந்தையும்

ஆற்றுவதால் நட்பு நீளும்!

இனியது எண்ணமாய் மலர

அனைத்தும் நம் வசப்படும்!

  •       அறமுடன் வாழ!

உள்ளம் நெறிபட
உயர்வு பெருகும்!

கள்ளம் அழிபட

கண்ணியம் வளரும்!

குறுக்கு வழி வெற்றியால்

வாழ்வு சறுக்கும !

சிறப்பான வாழ்விற்கு

சீறிய அறமே துணை!

  •        தைரியம்!

குடை மழையை நிறுத்தாது - ஆனால்
நம்மை நனையாமல் தடுக்கும்!
தைரியம் பிரச்சனையைத் தீர்க்காது - ஆனால்
எதிர்த்துப் போராட உதவும்!

  • கடமையே நல்லணி!

கரையிலே இருந்தால்
கடலைக் கடக்க இயலாது!

தரையிலே இருந்தால்

தாரகை எட்ட இயலாது!

சிறைப்பட்ட ஆற்றலால்

வெற்றி கிட்ட இயலாது!

தொய்விலா செயலால்

உயர்வை எட்ட இயலாது!

கடமையைச் செய்தால்

பயனை அடையலாம்!

  • வாழ்க்கை!

நாம் வாழ
பொருள் வேண்டும்!

நாம் வாழ்வதிலும்

பொருள் வேண்டும்!

  •  நம்பிக்கை!

உன்னை நம்பு
உன் கைரேகைகளை நம்பாதே!

  •       முயற்சி!

வாழும் காலம் சிறிது என்பதால்
நேரத்தை வீணாக்காதே!

வெற்றியின் தொலைவு தூரம் என்பதால்

முயற்சியைக் கைவிடாதே!

  •       வாழ்க்கை!

பொறுமையுடன் இருந்தால்
வாழ்வு சிறக்கும்!

பொறாமையுடன் இருந்தால்

வாழ்வு சிதையும்!

  •        எளிமை!

அறிவால் வருவது அடக்கம்
ஞானத்தால் ஒளிர்வது அமைதி

தகுதியால் பெறுவது பணிவு

அனைத்துக்கும் அணி எளிமை!

  •        தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!

வானம் பொய்யா வளம்பல பெற்று
பசிப்பிணி யில்லா உலகைப் போற்றி

பற்றற்ற வாழ்வை பண்புடன் கொண்டு

ஈடில்லா நெறியுடன் ஒழுக்கம் காத்து

அறநெறி வாழ்வை அன்புடன் பெற்று

இல்லற வாழ்வை இன்புடன் வாழ்ந்து

நன்றி மறவா நன்னெறி போற்றி

பகுத்துண்டு வாழும் பண்பை கொண்டு

எல்லா வளமும் இனிதுடன் பெற்று

தீப ஒளி திருநாளாம் இன்று

நல்மக்களுடன் தீதின்றி வாழ்க!

  •        துன்பம்!

தகாத நட்பும்
தகாத சொல்லும்

துன்பத்தைத் தரும்!

  •       வெற்றி!

வெற்றியும் தோல்வியும்
எதிர்எதிரானது அல்ல

அடுத்தத்தடுத்தப் படிகள்!

  •        சினம்!

சுடுசொல் பேசி
கடுமை நீங்கி

கேட்கும் மன்னிப்பால்!

மனம் சிதைந்த காயம்

மாறாது எப்போதும்!


கதிரவனைக் கண்டு

களிக்கும் தாமரை

உக்கிர அனலில்

உருவொளி இழக்குமே!

சேர்ந்தாரைக் கொல்லும்

சினம் எனும் கொல்லிக்கு

வாழ்வில் பலி

கொடுக்காமல் வாழ்வோம்!

  •        வாழ்க்கை!

இருளும் ஒளியும்
மாறும் தன்மையது!

இருளில் தவித்தலும்;

ஒளியின்றி அமிழ்வதும்

நிரந்தரம் இல்லை!

சுழலும் சக்கரத்தில்

நிலையென எதுவும் இல்லை!

உன் அமைதி குழைக்க

உலகில் எவரும் இல்லை!

தன்மதி தெளிய

அடையும் ஆனந்த எல்லை!

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...