திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’ கழுதை – என்றால் அழகு என்றொரு பொருள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நன்கு உறவாடி பழகி நல்ல நிலையில், நன்றாக இருந்தவர்கள் நலிவு பெறும்போது, மாற்றம் கண்ட இடத்து, மாறுதலை உணர்தலை முகமாகச் செய்வர். ஆனால் உண்மையில் கட்டெறும்பு அல்ல. கட்டி வைத்த இரும்பு. அதாவது கிடங்குகளில் கம்பியாகவோ, மற்ற இரும்புப் பொருட்களாகவோ நீண்ட நாள் புழக்கத்தில் இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்து வீணாகி விடும். தன்மை குறைந்து, தேய்ந்து பயனற்றதாகி விடும் என்பதை உணர்த்தும் உயரிய மொழி! கட்டிரும்பு தேய்ஞ்சு போச்சாம்! கழுதை – அழகு நிலையான ஒன்றல்ல. நாளடைவில் பொலிவு மலிந்து தேய்ந்து விடுதல் போல நீண்ட நாள் கட்டி வைத்த இரும்பும் தேய்ந்து போகும் என்பதாகும். இதே நோக்கில்தான் ஔவையும் சங்க காலத்தில் இருமன்னருக்கிடையே நடக்கவிருந்த போரில், அதைத் தடுக்க மன்னரின் படை மற்றும் ஆயுதங்களின் சிறப்பைக்...