மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’ கழுதை – என்றால் அழகு என்றொரு பொருள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நன்கு உறவாடி பழகி நல்ல நிலையில், நன்றாக இருந்தவர்கள் நலிவு பெறும்போது, மாற்றம் கண்ட இடத்து, மாறுதலை உணர்தலை முகமாகச் செய்வர். ஆனால் உண்மையில் கட்டெறும்பு அல்ல. கட்டி வைத்த இரும்பு. அதாவது கிடங்குகளில் கம்பியாகவோ, மற்ற இரும்புப் பொருட்களாகவோ நீண்ட நாள் புழக்கத்தில் இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்து வீணாகி விடும். தன்மை குறைந்து, தேய்ந்து பயனற்றதாகி விடும் என்பதை உணர்த்தும் உயரிய மொழி! கட்டிரும்பு தேய்ஞ்சு போச்சாம்! கழுதை – அழகு நிலையான ஒன்றல்ல. நாளடைவில் பொலிவு மலிந்து தேய்ந்து விடுதல் போல நீண்ட நாள் கட்டி வைத்த இரும்பும் தேய்ந்து போகும் என்பதாகும். இதே நோக்கில்தான் ஔவையும் சங்க காலத்தில் இருமன்னருக்கிடையே நடக்கவிருந்த போரில், அதைத் தடுக்க மன்னரின் படை மற்றும் ஆயுதங்களின் சிறப்பைக்...