மயில் & கான மயில் இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும். நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு...
விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள் ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் ” ( குறள் -1033) என்று உழவின் மேன்மையைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார் . அவ்வகையில் விவசாயம் என்பது குறைந்துவரும் தொழிலாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றது . விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறி வருகின்றன . நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் உணவின்றி வாழமுடியாது . நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வந்தார்கள் . அத்தகைய சிறப்பு மிகுந்த விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து நினைவுக் கூறும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது . ஏர் ஏர் என்பது வயல்களை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் . இது மரத்தால் செய்யப்பட்டது . இது பெரும்பாலும் நுனாமரம் என்னும் ஓதியன் மரத்தினால் செய்வர் ...