விடுகதை யில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள் வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு . அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும் . மானுடத்தின் சிந்தனைத் திறனையும் , பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும் , இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள் ‘ இலக்கியம் ’ எனும் பெருமை அடைகின்றன . அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும் . இலக்கியங்களில் விடுகதை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப் ‘ பிசி ’ என்று குறிப்பிடுவதைக் காணலாம் . தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது , ” ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும் ...
தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! அனைத்து நண்பர்கள், மற்றும் தமிழ் சொந்தங்களுக்குத் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையின் சிறப்பினையும் , நம் முன்னோர்கள் கொண்டாடிய விதத்தினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . ” வானம் பொய்யா வளத்தைப் பெற்று அறநெறி வாழ்வை அன்புடன் காத்து பற்றற்ற வாழ்வை பரிவுடன் வாழ்ந்து இல்லற வாழ்வில் நல்லறம் கொண்டு விருந்து போற்றி விருப்புடன் வாழ்ந்து நன்றி மறவா நன்மொழி காத்து எல்லா வளமும் இனிதுடன் பெற்று ...