Skip to main content

Posts

Showing posts from October, 2025

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!

  தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!                     அனைத்து நண்பர்கள், மற்றும் தமிழ் சொந்தங்களுக்குத் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையின் சிறப்பினையும் , நம் முன்னோர்கள் கொண்டாடிய விதத்தினையும்   உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .             ” வானம் பொய்யா வளத்தைப் பெற்று              அறநெறி வாழ்வை அன்புடன் காத்து                பற்றற்ற வாழ்வை பரிவுடன் வாழ்ந்து              இல்லற வாழ்வில் நல்லறம் கொண்டு             விருந்து போற்றி விருப்புடன் வாழ்ந்து              நன்றி மறவா நன்மொழி காத்து              எல்லா வளமும் இனிதுடன் பெற்று         ...

வெற்றி!

 வெற்றி! வெற்றியும் தோல்வியும் எதிரெதிரெதிதானது அல்ல அடுத்தத்தப் படிகள்! வெற்றியும் தோல்வியும் நிலையானதல்ல! தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றிக்கான வழி கிடைக்கும்!!!

சினம்!

 சினம்! சுடுசொல் பேசிப் பின் கடுமை நீங்கி கேட்கும் மன்னி்ப்பால்! மனம் சிதைந்த காயம் மாறாது எப்போதும்! கதிரவனைக் கண்டு களிக்கும் தாமரை உக்கிர அனலில் உருவொளி இழக்குமே! சேர்ந்தாரைக் கொல்லும் சினம் எனும் கொல்லிக்கு வாழ்வில் பலி கொடுக்காமல் வாழ்வோம்!!!

வாழ்க்கை!

 வாழ்க்கை! இருளும் ஒளியும் மாறும் தன்மையது! இருளில் தவித்தலும்; ஒளியின்றி அமிழ்தலும் நிரந்தரம் இல்லை! சுழலும் சக்கரத்தில் நிலையென இல்லை! உன் அமைதி குழைக்க உலகில் எவரும் இல்லை! தன்மதி தெளிய அடையும் ஆனந்த எல்லை!!!

தமிழக மலையின மக்கள் (புத்தக மதிப்புரை)

  தமிழக மலையின மக்கள் ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை என்ற கட்டுரையில் முனைவர் கே . ஏ . குணசேகரன் அவர்கள் எழுதிய தமிழக மலையின மக்கள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் .        இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக செப்டம்பர் 1994 – ஆம் ஆண்டும் , இரண்டாம் பதிப்பாக செப்டம்பர் 2011 – ஆம் ஆண்டும் சென்னை , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட் .,   வெளியிட்டுள்ளார்கள் . விலை 100 ரூபாய் , பக்கங்கள் 135. நூலாசிரியர் கே. ஏ. குணசேகரன்   என அழைக்கப்படும்   கரு. அழ. குணசேகரன் , அவர்கள் சென்னை , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் .  எழுத்தாளர் ,  நாட்டுப்புறவியல் - நாடகவியல்- தலித்தியல்   அறிஞர் , பாடகர் , மற்றும் திரைக் கலைஞர் ஆவார். நாடகத்தைப் பற்றியும் , நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும் , ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் , பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு ( theatre) மாற்றாக , தலித் அரங்கவியல் என்னும் கோட்ப...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...