மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...
அபிடேகத்திற்குரிய கருவிகள் இறைவனுக்கு அபிடேகம் செய்யக் கல், பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் முதலிய பொருள்களால் ஆனது. · பீடங்கள் – பல தலங்களில் கோமுகத்துடன் கூடிய அபிடேக உலோகப் பீடங்கள் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய அலங்காரமான அபிடேகப் பீடம் இருப்பது குறிக்கத்தக்கது. · ஏக தாரை – ஒரே துவாரமுடைய குவளை · சத தாரை – நூறு துளைகளைக் கொண்ட சல்லடை. · சகஸ்ர தாரை – ஆயிரம் துளைகளைக் கொண்ட சல்லடை. இதனைத் திருமால் ஆலயங்களில் ‘சோணாயிரம் கொண்டு’ என்பர். · சங்கு – 108 அல்லது 1008 சங்குகள். · மடி சங்கு – நீரொழுகும் சிறு சிறு தூம்புகளைக் கொண்ட பசுவின் மடி போன்ற சங்கு; அபூர்வமானது. · ...