Skip to main content

Posts

Showing posts from July, 2023

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

அபிடேகத்திற்குரிய கருவிகள்

  அபிடேகத்திற்குரிய கருவிகள்             இறைவனுக்கு அபிடேகம் செய்யக் கல், பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் முதலிய பொருள்களால் ஆனது. ·         பீடங்கள் – பல தலங்களில் கோமுகத்துடன் கூடிய அபிடேக உலோகப் பீடங்கள் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய அலங்காரமான அபிடேகப் பீடம் இருப்பது குறிக்கத்தக்கது. ·         ஏக தாரை – ஒரே துவாரமுடைய குவளை ·         சத தாரை – நூறு துளைகளைக் கொண்ட சல்லடை. ·         சகஸ்ர தாரை – ஆயிரம் துளைகளைக் கொண்ட சல்லடை. இதனைத் திருமால் ஆலயங்களில் ‘சோணாயிரம் கொண்டு’ என்பர். ·         சங்கு – 108 அல்லது 1008 சங்குகள். ·         மடி சங்கு – நீரொழுகும் சிறு சிறு தூம்புகளைக் கொண்ட பசுவின் மடி போன்ற சங்கு; அபூர்வமானது. ·       ...

வணங்கும் முறைகள்

  வணங்கும் முறைகள் கோயிலுக்குள் இறைவனை வணங்கும் முறைகள் இரண்டு வகைப்படும். 1. நின்று வணங்கல், 2. கிடந்து அல்லது விழுந்து வணங்கல் என்பன. திரியாங்கம்           தலைக்கு மேல் இரு கைகளைக் குவித்து, நின்று வணங்குவது. இது எல்லோர்க்கும் உரியது.           தெய்வம், துறவிகள், முனிவர்கள் முதலியவர்களை வணங்கும்போது தலைக்கு மேலும், பெற்றோர் ஆசிரியர் முதலியவர்களை வணங்கும்போது முகத்துக்கு நேரும், உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முதலியவர்களை வணங்கும்போது கழுத்துக்கு நேரும் கைகளைக் குவித்து வணங்குவது முறை என்பர். கைகள் குவிந்திருக்கும் போது தலை தாழ்ந்திருக்க வேண்டும். பஞ்சாங்கம்           தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு ஆகிய ஐந்து அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குவது பஞ்சாங்க வணக்கம். இது பெண்களுக்கு உரியது. அட்டாங்கம்           தலை, கை இரண்டு, காது இரண்டு, தோள்கள் இரண்டு, மேவாய் ஆகிய எட்டு அ...

அரசமரம் – விநாயகர் – பாம்புக்கல் வழிபாடு

  அரசமரம் – விநாயகர் – பாம்புக்கல் வழிபாடு அரசு, வேப்ப மரங்களை இணைத்தும் பிணைத்தும் அவைகளுக்குத் திருமணம் செய்கின்றனர். இத்திருமணம் வைதிக முறைப்படி நடைபெறுகிறது. அரசு - ஆண்; வெப்பத் தன்மையுடனும், வேம்பு - பெண்; குளிர்ந்த தன்மையுடனும் காற்றைத் தருகின்றன. இவை மருத்துவக் குணமுடைய மூலிகை மரங்கள்; மகளிரின் மலட்டுத் தன்மையை அறவே நீக்கும் மருத்துவ ஆற்றல் உடையவை. ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாள்’ என்ற பழமொழியை எல்லாரும் அறிவார்கள். அரசன் = அரச மரம். அரச மரத்தை வழிபட்டு வலம் வந்தால் நிச்சயம் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பி, புருஷனை விரட்டிக் கைவிட்டாளாம் ஒரு பெண்! உண்மைதான். மகப்பேறு தரும் அரச மரத்தின் ஆற்றலை இப்பழமொழி காட்டுகின்றது. ஓர் அகன்ற மேடையின் மீது, அரசு, வேப்பமர நிழலில், விநாயகர் சிலையும், பாம்புக் கல்லும் நிறுவப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காண முடியும். பாம்புக் கல்லில் இணைந்துள்ள பாம்புகளைப் போல தம்பதிகள் அரவணைக்க – புணரவேண்டும். பாம்புக் கல்லை வணங்கி வழிபட்டால் நாக தோஷம் முதலிய பல தோஷங்கள் விலகும். விநாயகர், பாம்புகளின் அருளாலும், அரசு, வேப்ப மரங்களின் மருத்துவ ஆற்...

பாம்பும் ஆறு சமயங்களும்

  பாம்பும் ஆறு சமயங்களும்           நாகப் பாம்பு ஆறு சமயப் பரம்பொருள்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. அத் தெய்வங்களை வழிபடுகின்றவர்கள் பாம்புகளையும் வழிபடுகின்றார்கள். பூக்களுடன் பிணைந்த பூ கதம்பமாகப் பொலிவு பெறுகின்றது. ·         காணபதியம் – கணபதியின் ஆயுதமாகவும், கச்சாகவும், குடையாகவும் இருப்பது பாம்பு. ·         சைவம் – சிவனுக்குப் பாம்பு அணிகலனாகவும் ஆயுதமாகவும் பயன்படுகிறது. பாம்பு குடை பிடிக்க விளங்கும் லிங்கம் ‘நாகலிங்கம்’ இதே வடிவத்தில் அமைந்த அற்புதமான ஒரு பூ நாகலிங்கப் பூ. ·         வைஷ்ணவம் – ஆதிசேடன், விஷ்ணு படுத்தால் படுக்கையாகிறது; சாய்தால் அணையாகிறது; இருந்தால் ஆசனமாகிறது; நடந்தால் குடையாகிறது; மரவடியாகிறது. ·         சாக்தம் – சக்தியின் ஒரு வடிவமாகப் பாம்பு கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வங்கள் பலருக்குக் குடையாக விரிந்திருப்பதும் பாம்புதான். ·     ...

ஆ தீண்டு குற்றி

  ஆ தீண்டு குற்றி           பசுக்கள் தம் உடம்பில் தோன்றும் தினவை இதமாக உராய்ந்துச் சுகமாகத் தணித்துக் கொள்வதற்கு வசதியாக, அவை மேயும் மந்தை வெளியில் ஒரு நீண்ட கருங்கல்லை நட்டு வைப்பார்கள். இக்கல்லை ‘ஆ தீண்டு குற்றி’ அல்லது ‘ஆ தீண்டு கல்’   அல்லது ‘ஆ உறிஞ்சி தறி’ என்று அழைத்தனர். இதனை நாட்டுவது மிகச் சிறந்த தருமச் செயலாக மதிக்கப்பட்டது. பசுக்களின் தினவைத் தணித்துக் கொள்வதற்கும் ஒரு தருமச் செயல் ஆகும். பார்வை நூல் 1.   இலக்கியங்களில் வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.

பழந்தமிழர் வாழ்வில் குற்றங்களும் தண்டனை முறைகளும்

  பழந்தமிழர் வாழ்வில் குற்றங்களும் தண்டனை முறைகளும்           சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் மக்கள் தங்களது வலிமையைப் பிறருக்கு எதிராகப் பயன்படுத்த முற்பட்ட போது , அது குற்றம் எனக் கருதப்பட்டது . அவ்வாறு குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனையும் , மெலியோர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிடும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது .           ஒவ்வொருவரும் தங்கள் நலனையும் உரிமையையும் இழக்காமல் இருப்பதற்கு அடுத்தவர் ஆற்ற வேண்டிய கடமையை அரசுச் சுட்டிக்காட்டியது . தங்களுக்குரிய கடமைகளில் இருந்து தவறுபவர்களும் குற்றம் செய்தவர்கள் எனக் கருதப்பட்டனர் . குற்றம்           ஒருவர் தன் நலனைப் பேணுவதற்காக அடுத்தவரின் உயிர் , உடல் , உடைமை முதலியவற்றிற்குத் தீங்கிழைக்கும் செயலை இன்று குற்றம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர் .           ‘ குற்றம் ’ என்ற சொல்லுக்குப் பிழை , பழி , துன்பம் , தீங்கு எனப் பலப் பொருள்களைத் தருகிறது . ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...