சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
தமிழினத்தின் பொதுமை நோக்கு தமிழன் தனக்காக வாழக் கற்றனால்லன். தான் வாழ்வதை விட உலகத்து உயிர்கள் இன்பமாக வாழ எண்ணுவமே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. ”தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன்” என்ற தொடர் புறநானூற்றில் வருகின்றது. பண்ணன் மட்டுமல்லன்; தமிழ் நாட்டில் பிறந்த அனைவருடைய பிரதிநிதிதான் பண்ணன் என வைத்துக் கூறப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரையும் தன்னுடன் பிறந்தவராகவே தமிழ் உள்ளம் எண்ணியது. அதனால் தான், ”யாதும் ஊரே; யாவரும் ஊரே”! என்ற தொடர் இதனை வலியுறுத்துகின்றது. தன் நாடு, தன் மொழி, தன் இனம் என எண்ணாமல் உலகம் அனைத்தையும் ஓர் இனம் என எண்ணிய பொதுமை உள்ளம் தமிழனை இன்றும் வாழ்வித்து வருகின்றது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் உலக நாடுகளில் சென்று தங்கிய இடமெல்லாம் இத்தொடர்பை வலியுறுத்தி வாழ்ந்தனர். தமிழ்ப் பண்பாட்டை உலகப் பண்பாகவே வளர்த்த...