கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
விவேகானந்தரின் சிந்தனைகள் ! விவேகானந்தர் ஒரு துறவி ; வீரமும் விவேகமும் மனிதநேயமும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையும் கொண்டவர் . ஆசைகளை வென்றவர் . தவமுனிவராகத் திகழ்ந்தவர் . எனினும் விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் ஆசையின்மை , தவம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியதைவிட அதிகமாக மக்கள் நல சிந்தனைகளை வெளிப்படுத்தினார் . ஏழைமக்களைப் பற்றிக் கவலைப்பட்டார் . அவர்களுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் . ” சோறு வேண்டும் , சோறு வேண்டும் . இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம் . சொர்க்கத்தில் நித்தியானந்தத்தைத் தருவாராம் – இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை ” என்று இதயம் குமுறினார் விவேகானந்தர் . விவேகானந்தரின் வாழ்க்கை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏழை எளிய , இன்னல் பல பெற்ற உழை...