Skip to main content

Posts

Showing posts from March, 2025

விவேகானந்தரின் சிந்தனைகள்!

  விவேகானந்தரின் சிந்தனைகள் !                   விவேகானந்தர் ஒரு துறவி ; வீரமும் விவேகமும் மனிதநேயமும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையும் கொண்டவர் . ஆசைகளை வென்றவர் . தவமுனிவராகத் திகழ்ந்தவர் . எனினும் விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் ஆசையின்மை , தவம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியதைவிட அதிகமாக மக்கள் நல சிந்தனைகளை வெளிப்படுத்தினார் .           ஏழைமக்களைப் பற்றிக் கவலைப்பட்டார் . அவர்களுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் .         ” சோறு வேண்டும் , சோறு வேண்டும் . இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம் . சொர்க்கத்தில் நித்தியானந்தத்தைத் தருவாராம் – இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை ” என்று இதயம் குமுறினார் விவேகானந்தர் . விவேகானந்தரின் வாழ்க்கை           நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏழை எளிய , இன்னல் பல பெற்ற உழை...

உருமு தனலெட்சுமி கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களாக...

  உருமு தனலெட்சுமி கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களாக...     இன்று (26.03.2025) திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரி, தமிழாய்வுத்துறையில்   காலை 10.00 மணிக்கு செயற்கை நுண்ணறிவியலின் பயன்கள் (Artificial Intellegence in Tamil) என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. அதற்குச் சிறப்பு விருந்தினராக திரு. ஜெ. வீரநாதன் எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்., Director, Balaji insititute of Computer Graphics, Coimbatore-45 என்பவர் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிலரங்கம் நடத்தினார். அப்பயிலரங்கில் பி.லிட், எம்.ஏ முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். நானும் பயனடைந்தேன்.       செயற்கை நுண்ணறிவின் websites, அதைப் பயன்படுத்தி எவ்வாறு Picture Download பண்ணும் முறை, Key board Usage. Download பண்ணிய Picture பேச வைக்கும் முறை, பாடல் பாட வைக்கும் முறை என்று அனைத்தையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும் பயலரங்கம் நடத்தித் தாருங்கள் என்று   அவரிடம் கேட்டுக் கொண்டேன்.         அந்ந...

புளியஞ்சோலை சென்ற அனுபவங்களாக…

    புளியஞ்சோலை சென்ற அனுபவங்களாக…   (21.03.2025 அன்று வெள்ளி கிழமை அன்று மாலை புளியஞ்சோலை நானும் என் தோழிகளும் சென்றோம். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)   கொங்கு நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடா்ச்சி மலை தான் கொல்லிமலை . செந்தமிழ் நாட்டின் சங்ககாலப் புலவா்களால் புகழ்ந்து பாடப்பெற்றது . இம்மலை தென் வடலாக 28 கி . மீ (18 மைல்கள் ) கிழ மேற்காக 9 கி . மீ (12 மைல்கள் ) அகலமும் கொண்டது . மொத்தம் 283.9 சதுர கி . மீ பரப்பளவில் உடையது . கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரமுடையது . அருவி வளமும் , நில வளமும் மிக்கது சங்கப் பாடல்களில் உள்ள கொல்லிமலைப் பாவையைத் தன்பால் கொண்டு ,   சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழும் கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்திற்கும் , திருச்சி மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது . இம்மலையின் அருவி வளத்தால் , திருச்சி மாவட்டம் துறையூா் வட்டத்தின் பல ஊா்கள் வளம் பெறுகின்றன . காவிரியின் துணையாறுகளில் ஒன்றாகிய ஐயாறு இம்மலையில் தான் தோன்றிப் பல ஊா்களை வளப...

டால்ஸ்டாய் எழுதிய கதை

  டால்ஸ்டாய் எழுதிய கதை மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்? (How much land does a man require?) (பேராசை பெரு நஷ்டம் என்பதற்கிணங்க இக்கதை அமைந்துள்ளது. மிகச் சிறந்த கதை)           பக்கோம் பேராசைக்காரன், ஒரு முறை நிலச் சொந்தக்காரனான பாஷ்கீரைச் சந்தித்தான்.           ”உங்கள் நிலத்திற்கு என்ன விலை?” என்று கேட்டான்.           ”காலால் நடந்து ஒரு நாளில் எவ்வளவு நிலத்தைச் சுற்றி வருகிறாயோ, அவ்வளவும் உன்னுடையதுதான்.”           பக்கோமுக்கு ஒரே மகிழ்ச்சி! கையிலிருந்ததை முன் பணமாகக் கொடுத்து விட்டு ஓட ஆரம்பித்தான்.           காலையில் சூரியன் உதித்தவுடன் ஓட ஆரம்பித்தவன் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தான். நண்பகலுக்குப் பிறகு அவனால் ஓட முடியவில்லை. கால்கள் வலித்தன.           சூரியன் அவனுக்காக காத்திருக்கவில்லை. அது ...

பெருந்தலைவர் காமராசர்

  பெருந்தலைவர் காமராசர்             காமராசர், தமிழகத்தின் முதலமைச்சராக 1954 – ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்றார். முதல்வரான பின்னும் முன்பிருந்த சென்னை திருமலைப் பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து தங்கினார். காமராசரின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக இருந்தவருமான ரா. கிருஷ்ணசாமி நாயுடு ஒரு நாள் பெருந்தலைவரை அவருடைய வீட்டில் சந்தித்தபோது, ‘உங்கள் தாயார் விருதுநகரில் தனியாக வாழ விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால் உங்கள் வீட்டின் ஒரு மூலையில் எந்தச் சிரமமும் தராமல் எஞ்சிய காலத்தை உங்கள் முகத்தைப் பார்த்தபடி கழித்துவிடுவதாகக் கண்ணீர் ததும்பச் சொல்கிறார். அவரை அழைத்து வரலாமா? என்று கேட்டார்.           ‘எனக்கு மட்டும் தாயின் மீது பிரியம் இல்லையா? தந்தை இல்லாத பிள்ளையாய் எவ்வளவு துயரப்பட்டு என்னை அம்மா வளர்த்திருப்பார். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால், அவரைப் பார்க்க அடிக்கடி பத்துப் பேர் வருவார்கள். ‘அத்தையைப் பார்க்க வந்த...

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம், நூல் வெளியீட்டு விழா ...

         சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம்,  நூல் வெளியீட்டு விழா ... சேலம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த) மற்றும் சேலம், மகிழம் தமிழ்ச் சங்கம், டுடே பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் இணைந்து   உலக தாய்மொழி தினம் 2025 – ஐ முன்னிட்டு நிகழ்த்தும் முப்பெரும் விழா – 2025 சேலம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ் முப்பெரும் விழாவில் விருது வழங்கும் விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆறாவது பல்துறை சார்ந்த மாபெரும் புத்தக வெளியீட்டு விழா என்று மூன்று விழாக்களும் ஒரே மேடையில் நிகழ்ந்தது. இவ்விழாவில் SPJ SING PTE LTD, Singapore Dr P.Nalini. அவர்களும், பேராசிரியர், தலைவர், சமூகவியல் துறை, தங்கவயல் சட்டக் கல்லூரி, கோலார் தங்க வயல், கருநாடக மாநிலம், முனைவர் பெ.கணேஷ் அவர்களும்,   விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.   இத்தகைய சிறந்த நூல் வெளியீட்டு விழாவில் என்னுடைய நூலான   தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலும் வெளியானது. ஆகையால் இன்றைய தினம் எனக்குச் சிறந்த நாளாக அமைந்தது. இந் நூலை சிறந்த முறையில் நூல...