Skip to main content

Posts

Showing posts from October, 2022

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

தொல்தமிழர் உணவுமுறைகள்

தொல்தமிழர் உணவுமுறைகள்         தமிழ் மக்கள் அனைவரும் ஒரே வகையான உணவை உண்டார்கள் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை . இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்குக் கிடைத்தப் பொருள்களையும் , தங்கள் முயற்சியால் தட்பவெப்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்தப் பொருள்களையும் கொண்டு தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டார்கள் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன . உணவுப் பொருள்களை அப்படியே உண்ணாமல் நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் . குறிஞ்சி நில மக்களின் உணவுமுறைகள்           சோழநாட்டுக் குறிஞ்சி நில மக்கள் கிழங்கையும் தேனையும் மகிழ்ந்து உண்டார்கள் . இவ்விரண்டு பொருள்களையும் பிறருக்கு விற்று அவற்றிற்குப் பதிலாக மீன் , நெய்யையும் நறவையும் வாங்கிப் போய் உண்டுள்ளார்கள் . சில சிறப்பான நாள்களில் நெய் மிகுதியாகப் பெய்த உணவு அவர்களால் உண்ணப்பட்டது . மலை அடிவாரத்தில் வாழ்ந்த சிற்றூர் மக்கள் தினைச் சோறு சமைத்து நெய்யில் இறைச்சியை வேகவைத்து இரண்டையும் சேர்த்து உண்டார்கள் .   ...

தும்மல்

  தும்மல்         தும்மலில் கூட நன்னிமித்தம் தீ நிமித்தத்தைத் தமிழர்கள் கண்டனர். தும்மல் என்பது இயல்பாக வருவதாகும். ஆனால், யாரோ தம்மை நினைப்பதனால்தான் தும்மல் வருகிறது என்ற எண்ணம் இதன்பால் உள்ள நம்பிக்கையைப் புலப்படுத்தும். இன்ன நேரத்தில், இன்ன இடத்தில் தும்மக்கூடாதென்னும் நம்பிக்கை நடைமுறை வாழ்க்கையில் உள்ளது. மேலும் தும்மலில், ஒரு சிலர் தும்மினால் நன்மை விளையும்; அல்லது துன்பமின்றிக் கழியும். ஆனால் ஒருசிலர் தும்மினால் தீமை விளைவதுண்டு என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்து வருகின்றது. அதனால்தான் மங்கலக் காரியங்களில் தும்மல் ஓசை காதில் விழாவண்ணம் மங்கல இசை பெருத்த ஓசையுடன் இசைக்கப்படுகின்றது எனவும் கொள்ளலாம்.           சிறப்புடைச் சடங்கின்போதும், யாதொரு நற்செயலைத் தொடங்கும்போதும், வெளியில் புறப்படும்போதும் தும்மக் கூடாதென்பர். அத்துடன் வீட்டின் வாயில் நிலையில் அமர்ந்தவாறும், உணவு உட்கொள்ளும் போதும் தும்மக் கூடாதென்பர். இவையெல்லாம் நடைமுறைப்பட்ட நம்பிக்கைகளாகும்.      ...

கலித்தொகையில் காளையின் வகைகள்

  கலித்தொகையில் காளையின் வகைகள்         காளைகளின் இலக்கணத்தைக் கலித்தொகையிலே காணலாம். காளைகளிலே ஐந்து வகையுண்டு. அவை காரி, வெள்ளை, குரால், புகர், சேய் என்பன. காரி-கறுப்புக்காளை, வெள்ளை- வெள்ளைக்காளை, குரால்-மயிலைக்காளை, புகர்-புள்ளிக்காளை, சேய்-சிவப்புக்காளை. அவைகளின் தோற்றங்கருதி ஐவகையாகப் பிரித்தனர்.           ”வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத்           தெள்ளிதின் விளங்கும், சுரிநெற்றிக் காரியும்”           திருமால் தன் வாயில் வைத்து ஊதுகின்ற வலம்புரிச் சங்கினைப் போல், தெளிவாக விளங்கும் வெண்மையான நெற்றியையுடைய கறுப்புக் காளையும்,           ”ஒரு குழையவன் மார்பில் ஒண்தார்போல், ஒளிமிகப்            பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்”           பலராமனுடைய மார்பிலே நீண்டு தொங்குக...

தமிழர் வீரம்

  தமிழர் வீரம்             தமிழர்களின் ஒப்பற்ற வீரத்தைப் பற்றி உரைக்கும் பாடல்கள் பலவுண்டு. வீரம் என்றால் இளைத்தவர்களை- வீணாக இன்னலுக்கு ஆளாக்கித் தான் மட்டும் இன்புற்று வாழ்வதன்று. மற்றவர்களைக் காட்டிலும் தான் ஆற்றலுடையவன் என்பதை அறிவித்துக் கொள்ளுவதன்று; தான் கொண்ட கொள்கையிலே உறுதியுடன் நிற்றல்; தான் செய்யத் தொடங்கிய செயல்களை முட்டுக்கட்டைகளுக்கு அஞ்சாமல் முயற்சியுடன் செய்து முடித்தல்; தன் மானத்திற்கு இழுக்கு வராமல் தன் செயலிலே வெற்றியடைதல்; தன்னைக் காரணமின்றித் தாழ்த்திப் பேசுவோர் நாணும்படி அவர்கள் செருக்கைச் சிதைத்தல். இவைகளே வீரத்தின் இயல்பு. இத்தகைய சிறந்த வீர முடையவர்களே இந்நாட்டுத் தமிழ் மன்னர்கள்.           பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் வழி அறியலாம். இவன் வீரத்திலே மிகுந்த வேந்தன் மட்டுமன்று; செந்தமிழ் புலவனாகவும் சிறந்திருந்தான்.           ”படை பலத்தால் என்னை இகழ்ந்துரைத்த வேந்தர்களுடன் வீரப்போர் புர...

கொடுக்கல் வாங்கல்

  கொடுக்கல் வாங்கல்           கொடுக்கல் வாங்கல் என்பது உலக வழக்கு. கடன் கொடுப்பது கொடுக்கல். அதைத் திருப்பி வாங்குதல் வாங்கல். பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் முறை ஏற்பட்ட பிறகுதான் கொடுக்கல் வாங்கல் என்ற சொற்றொடர் பிறந்திருக்கக் கூடும்.           பண்டைக் காலத்திலே பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பொருள் வேண்டியவர்கள். தமக்கு வேண்டிய பொருளை, உள்ளவர்களிடம் கடனாக வாங்கி க் கொள்வார்கள். பிறகு கொடுத்து விடுவார்கள். இப்படி வாங்கும் கடனுக்குத் தனிசு என்று பெயர்.           கடன் வாங்கும் போது முகமலர்ச்சியுடன் வாங்குவார்கள். அக் கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது வாங்கும் போதிருந்த முகமலர்ச்சியை அவர்களிடும் காண முடியாது. இதை இன்றும் கடன் வாங்குவோரிடம் காணலாம். கடன் கொடுத்தவர்களுக்கும் கடன் வாங்கினவர்களுக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் காண்கின்றோம். வாங்கும்போது மகிழ்ச்சியடைதலும், கொடுக்கும்போது வருத்தமடைதலு...

ஆரியர்கள்

  ஆரியர்கள்         வட நாட்டினரை ஆரியர்கள் என்ற பெயரால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அகநானூற்றிலும் இதைக் காணலாம். தமிழ் நாட்டு மன்னர்களுக்கும், வடநாட்டு மன்னர்களுக்கும் சங்க காலத்திற்கு முன்பே பல போர்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களும் வடநாட்டின் மேல் படையெழுத்திருக்கின்றனர்.           ஆரியர் – தமிழர் போராட்டங்களுக்கு இனவெறியோ, மதவெறியோ கலாசார வெறியோ காரணங்கள் அல்ல. தமிழ்நாட்டு மன்னர்கள் – சேர, சோழ, பாண்டியர்கள் அடிக்கடி தங்களுக்குள் போரிட்டு வந்தனர். இவர்கள் போரிட்டுக் கொள்வதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் தமிழரையும் ஆரியரையும் சண்டையிடச் செய்தது. சேர, சோழ பாண்டியர்கள் கலாசாரத்தில் எப்படி ஒன்றிபட்டிருந்தனரோ, அதைப் போலத்தான் அக்காலத்தில் ஆரியரும் தமிழரும் கலாசராத்தில் ஒன்றுபட்டிருந்தனர்.           ”ஆரியர்              பொன் படுநெடுவரை (அகம். பா.398)           ஆரியர்...

போர் - அன்றும் இன்றும்

  போர் - அன்றும் இன்றும்           அணு ஆயுதங்களின் மூலம் தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இன்று உலக நாடுகளிடையே பனிப்போர்கள் பெருகி வருகின்றன . இத்தகைய சூழலில் போர் என்பதன் பொருள் யாது ? போரில் பின்பற்ற வேண்டிய நெறிகள் யாவை ? என்பவற்றை அறிதற்குப் பண்டைத் தமிழர் போரில் பின்பற்றிய நெறிகள் துணைபுரியும் . ‘ பொரு ’ என்னும் வேர்ச் சொல்லினடியாகப் பிறந்தது ‘ போர் ’ எனும் சொல் , ஆற்றலினும் படை பலத்திலும் ஒத்தத் தன்மையுடையாரோடு பொருதலே போர் என்பது பண்டைத் தமிழரின் கொள்கை , தற்காலத்தில் நிகழ்வது போல் எதிர்பாராது தாக்குதல் , மறைந்திருந்து தாக்குதல் , அதிரடித் தாக்குதல் போன்ற முறைகளில் போர் நிகழவில்லை . போர் செய்யப் போவதை அறிவித்தப் பின்னர்ப் போர் செய்வது மரபாக நிலவியது . வெண்ணி , வாகை , திருப்போர்ப்புறம் ஆகிய இடங்களில் களங்குறித்துச் செய்த போர்கள் பற்றிய செய்திகளை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன .           இக்காலத்தைப் போலக் கண்ணுக்குத் தெரியாத அணு ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் போர் நிகழ்த்தவில்...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...