திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ ஆறுகளில் வற்றாத ஜீவ நதிகளும் உண்டு. கோடையில் மிகுந்த வெப்பத்தால் நீர் வரண்டு மணல் திட்டுக்களாக காணப்பெறும் ஆறுகளும் உண்டு. மண் திட்டு – அதாவது குதிர் என்பதற்கு குன்று, திடல் என்பது பொருள். இப்போது மணல் குன்றானது மழை பொய்த்த காலங்களிலோ, கோடையிலோ வரண்டிருக்கும் போது சில ஆறுகளில் இவ்வாறு மணல் குன்றுகள் ஆங்காங்கே நீரினூடே காணக் கிடைக்கும். இப்படிப்பட்ட மண் குதிரை மணல் குன்றை நம்பி தைரியமாக இறங்கி நடப்போமானால் திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கும்போது நீர் ஆழம் நம்மைத் திணற அடிக்கும். எனவே இத்தகைய மணல் குன்றை நம்பி இறங்கித் துன்பப்படக் கூடாது என அறிவுறுத்த இயற்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்த மொழியே ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ என்பது! பார்வை நூல் 1. மாணவர்களுக்கான பழமொழி கட்டுரைகள் – ஹேமா ராமானுஜம் , பாவை பப்ளிகேஷன்ஸ் , சென்னை - 14. ...