மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
நாட்டுப்புற இலக்கியத்தில் சந்தை மேலாண்மை நாட்டுப்புற பாடல்களில் பலவகையான சந்தைகளில் என்னென்ன பொருள்கள் எவ்விடங்களில் விற்கப்படுகின்றன என்றும் என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி , இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற செய்திகளையும் அறிந்து கொள்ளலாம் . கிராமத்துச் சந்தைகளில் மொத்த விற்பனையும் நடைபெறும் . இவை பெரும்பாலும் வாரச் சந்தைகளாகும் . இன்றும் கிராமங்களில் நம் நாட்டுப் பாடல்களைப் போல வாரச் சந்தைகளும் வாழ்ந்து வருகின்றன . வாரச் சந்தை முறையில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை கூடுகிறது . சிறிய பெரிய வியாபராங்கள் இங்கே நடைபெறும் . குறிப்பாக விவசாயப் பொருள்களும் , ஆடு மாடுகளும் இங்கே விற்கப்படும் . நகர்ப்புற அங்காடிகள் சிலப்பதிகாரத்தில் வருகின்ற அழகிய அங்காடிகள் தொன்று தொட்டே நம் நாட்டில் இருந்துவந்தன . பகல் நேரத்தில் செயல்படுவன ‘ நாளங்காடி ’ என்றும் , இரவு நேர அங்காடிகளுக்கு ‘ அல்லங்காடி ’ என்றும் கூறுவர் . ...