வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில் இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...
நாட்டுப்புற இலக்கியத்தில் சந்தை மேலாண்மை நாட்டுப்புற பாடல்களில் பலவகையான சந்தைகளில் என்னென்ன பொருள்கள் எவ்விடங்களில் விற்கப்படுகின்றன என்றும் என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி , இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற செய்திகளையும் அறிந்து கொள்ளலாம் . கிராமத்துச் சந்தைகளில் மொத்த விற்பனையும் நடைபெறும் . இவை பெரும்பாலும் வாரச் சந்தைகளாகும் . இன்றும் கிராமங்களில் நம் நாட்டுப் பாடல்களைப் போல வாரச் சந்தைகளும் வாழ்ந்து வருகின்றன . வாரச் சந்தை முறையில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை கூடுகிறது . சிறிய பெரிய வியாபராங்கள் இங்கே நடைபெறும் . குறிப்பாக விவசாயப் பொருள்களும் , ஆடு மாடுகளும் இங்கே விற்கப்படும் . நகர்ப்புற அங்காடிகள் சிலப்பதிகாரத்தில் வருகின்ற அழகிய அங்காடிகள் தொன்று தொட்டே நம் நாட்டில் இருந்துவந்தன . பகல் நேரத்தில் செயல்படுவன ‘ நாளங்காடி ’ என்றும் , இரவு நேர அங்காடிகளுக்கு ‘ அல்லங்காடி ’ என்றும் கூறுவர் . ...