கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர். கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...