Skip to main content

Posts

Showing posts from July, 2024

கீழடிப் புதையல்

  கீழடிப் புதையல்  இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை   உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக்   கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம்   குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

மக்களிடம் வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்கும் முறை

  மக்களிடம் வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்கும் முறை புறநானூறு – 184 பாடியவர் – பிசிராந்தையார் பாடப்பட்டவர் – பாண்டியன் அறிவுடை நம்பி திணை – பாடாண் திணை துறை – செவியறிவுறூத் துறை         மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை அழகிய யானை புகுந்த வயல் உவமையால் விளக்கும் இப்பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் பாடலாக அமைந்துள்ளது.          ”காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே         மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்         நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே         வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்         அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே           கொடி யாத்து நாடுபெரிது நந்தும்         மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்         வரிசை ...

பேரின்பம் – பிள்ளைகள் தரும் இன்பம்

  பேரின்பம் – பிள்ளைகள் தரும் இன்பம்   புறநானூறு – 188 பாடியவர் – பாண்டியன் அறிவுடை நம்பி திணை – பொதுவியல் திணை துறை – பொருண்மொழிக் காஞ்சித்துறை             எவ்வளவு செல்வம் இருந்தாலும், கூடி உண்ணக் கூடிய கோடிச் சுற்றம் இருந்தாலும், பெற்றோர்க்குக் குழந்தைகள் தரும் இன்பம் குறைவில்லாப் பேரின்பம் என்பதை விளக்கும் பாடல்.             ”படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்           உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்           குறுகுறு நடந்து சிறுகை நீட்டி           இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்           நெய்யுடை அடிசி மெய்பட விதிர்த்தும்           மயக்குறு மக்களை இல்லோர்க்குப்           பயக்குறை இல்லைத் தாம்வாழு...

கொழுமுகத்துக் குழந்தை (சீதை)

  கொழுமுகத்துக் குழந்தை (சீதை)           விதேஹ மன்னரான ஜனகர் மிகவும் நல்லமுறையில் தம் தேசத்தை ஆண்டு வந்தார். தசரதச் சக்கரவர்த்திக்குப் பழைய மித்திரர். தசரதன் புத்திரப் பேற்றுக்காகச் செய்த பெரிய யாகத்திற்கு அரசர்களை அழைத்தபோது ”ஜனகரிடம் தூதுவர்களை அனுப்பவேண்டாம். மந்திரிகளே நேரில் போய் அழைக்க வேண்டும்” என்று தனி உத்தரவிட்டான். ஜனகர் ஒரு ராஜரிசி;   சூரர்; எல்லாச் சாஸ்திரங்களையும் நன்றாகக் கற்றவர்; வேத வேதாந்தகளில் நிபுணர்; நியமம் காத்தவர்; பிரம்மஞானி. கடமைகளைச் செய்தே சித்தியடைவதைப் பற்றி அர்ச்சுனனுக்கு எடுத்துச் செல்லும்போது, கண்ணன் ஜனகரைச் சிறந்த உதாரணமாக எடுத்துச் சொன்னான். அவதார தேவி சீதையை மகளாகப் பெற்ற தகுதி கொண்ட மகான்.           ஒரு காலத்தில் ஜனக மகாராஜா யாகம் செய்வதற்கென்று இடம் கண்டு, அதைத் தாமே கலப்பைப் பிடித்து உழுதார். உழுது, புதரும் பூண்டுமாக இருந்த பூமியைத் திருத்தி ஒழுங்குப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மண்ணில் ஒரு திவ்ய ரூபமான பெண் குழந்தையைக் கண்டார். ஜனகருக்குக் குழந்தை...

இன்பமும் துன்பமும் கலந்தது தான் இவ்வுலகம்

  இன்பமும் துன்பமும் கலந்தது தான் இவ்வுலகம்   புறநானூறு – 194 பாடியவர் – பக்குடுக்கை நன்கணியார் திணை – பொதுவியல் திணை துறை – பெருங்காஞ்சித் துறை பாடலின் உட்பொருள் - உலக வாழ்வின் இயல்பை உள்ளபடி விளக்கும் பாடல்.         ”ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்         ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்         புணர்ந்தோர் பூஅணியப் பிரிந்தோர்         பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்         படைத்தோன் மன்றஅப்பண்பி லாளன்         இன்னாது அம்மஇவ உலகம்         இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே”                     ஒரு வீட்டில் சாவு மேளம் ஒலிக்கிறது. இன்னொரு வீட்டில் இனிமையான மங்கல இசை முழங்குகிறது. மகிழ்வில் கூடியவர்கள் மலர் மாலை சூடி மகிழ்கின்ற...

இல்லற வாழ்வே இனிது

  இல்லற வாழ்வே இனிது   புறநானூறு – 193 பாடியவர் – ஓரேருழவர் திணை – பொதுவியல் திணை துறை – காஞ்சித் துறை பாடலின் உட்பொருள் - இப்பாடல் தனி மனிதர் துறவு பற்றி எண்ணலாம். சுற்றத்தாருடன் கூடி வாழ்பவன் இருக்க வேண்டியது இல்லறத்தில் தான் என்னும் சீறிய கருத்தை உணர்த்துகிறது.         ”அதன் எறிந்தன்ன நெடுவெண் களரின்           ஒருவன் ஆட்டும் புல்வாய் போல         ஓடி உய்தலும் கூடும்மன்         ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே”             தோலை உரித்துத் திருப்பிப் போட்டது போலிருக்கும் நீண்ட வெள்ளை களர் நிலத்தில், வேடன் ஒருவனால் விரட்டப்படும் மான் ஒன்று உயிர் பிழைக்க இங்கும் அங்கும் ஓடி அலைந்து தவிக்கும். பின் உயிர் தப்பிப் பிழைக்கவும் கூடும். ஆனால் குடும்பத்தோடு கூடி வாழும் என் இல்லற வாழ்வில் நான் அப்படித் தப்பிப் பிழைக்க வழியில்லை. தப்பி ஓட நான் முயன்றாலும் என் உறவும் சுற்றமும்...

இரப்பதிலும் இறப்பது மேல்!

  இரப்பதிலும் இறப்பது மேல்!   புறநானூறு   - 74 பாடியவர் – சேரன் கணைக்காலிரும் பொறை திணை – பொதுவியல் திணை துறை – முதுமொழிக் காஞ்சித் துறையைச் சார்ந்தது           ”குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்           ஆள்அன்று என்று வாளின் தப்பார்           தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய           கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்               மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்             தாம் இரந்து உண்ணும் அளவை           ஈன்ம தோஇவ் வுலகத் தானே”             குழந்தை இறந்து பிறந்தாலும், பிறக்கையிலேயே குறைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றை முழு ஆள் அல்ல என்று கருதி வாளால் வெட்டிய பின்பே மண்ணில் புதைப்பர் மறக்குடியினர். அப்...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...