Skip to main content

Posts

Showing posts from October, 2024

இளமையில் கல் நில்லாது செல்! (புத்தக மதிப்புரை)

  இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் .    அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் .   ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன்   குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும்   இந்நூலுக்கு   பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...

தமிழே அறிவு மொழி!

  தமிழே அறிவு மொழி!           தமிழரில் ஒவ்வொருவரும் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் சம அளவில் பயிற்சி பெற வேண்டுமென்பதும் தமிழுக்குப் பெருமை தேடுவது ஆகாது. உலகிலுள்ள அறிவு நூல்களெல்லாம் தமிழில் வெளிவர வேண்டுமானால், எல்லோரும் ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக ஏற்றுக் கற்கும் நிலை கைவிடப்பட வேண்டும்.           ஜெர்மனியன் ஜெர்மன் மொழியின் மூலமாகத்தான் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளியாகின்றான். அவன் ஜெர்மனியையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாகக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதில்லை. அப்படியே பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் அந்தந்த நாட்டு மொழியின் மூலந்தான் மக்கள் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளிகளாகிறார்கள். அற்புதங்கள் புரியும் விஞ்ஞானிகள் கூட இதற்கு விலக்கல்லர்.           உலகப் புகழ் பெற்ற ருஷ்ய ஞானியான டால்ஸ்டாய்க்கு ஆங்கிலம் தெரியாது. வள்ளுவரை இன்றும் உலகம் போற்றுகிறதே.   அவருடைய திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் வெளியாகியிருக்...

இதுவா பகுத்தறிவு?

  இதுவா பகுத்தறிவு?             தமிழர்கள் ஒவ்வொருவரும் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலே தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்   அளவுக்கு ஓரளவு புலமை பெற்றிருந்தால் போதும். அதற்கு மேல் அதில் புலமை அவசியமில்லை. இந்தியாவிற்கு ருஷ்யாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வந்த தொழில் நுட்ப அறிஞர்கள் பலர் ஆங்கிலத்தைப் பிழையாகத் தான் பேசுகிறார்கள். ஆனால், தாங்கள் சொல்ல நினைத்ததைச் சொல்ல அவர்களால் முடிந்தது. அவர்கள் இந்திய அரசால் அழைக்கப்பட்டு அவர்கள் நாட்டு அரசுகளால் அனுப்பப்பட்ட தொழில் நுட்ப அறிஞர்களாவர்.           நம் நாட்டு படிப்பாளிகள் ஆங்கிலத்தில் பிழையாகப் பேசினால் எள்ளி நகையாடுகிறார்கள். தமிழரல்லாதவர்கள் ஒருவர் தமிழைப் பிழையாகப் பேசினால் இவர்கள் சிரிப்பதில்லை! இந்த மூடத்தனம் தமிழ்நாட்டில்தான் முடிசூடிக் கொண்டு ஆட்டம் போடுகிறது!           கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதால் அவற்றில் ஆங்கில ஆதிக்கம் ...

மொழிப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார்!

மொழிப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார் !           ‘ மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு – விஷயங்களைப்  புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்  தேவையானதே ஒழிய , பற்று கொள்வதற்கு அவசியமானதல்ல ’ என்று தந்தை பெரியார் கூறி இருப்பதிலிருந்து அவர் எதையும் பகுத்தறிவுக்கண் கொண்டு அணுகுபவர் என்பது புலப்படும் .           தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்தும் தமிழ்தான் . அவை ஆரியக் கலப்பால் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேணப்பட்டு வருகின்றன என்பதற்குத்தான் ஆராய்ச்சிமூலம் பெரியார் பல கருத்துக்களைக் கூறியிருக்கிறார் .           பெரியார் இந்தியை ஏன் எதிர்த்தார் . தமிழ் , தமிழ் நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது மக்களின் நல்வாழ்விற்கும் , பண்புக்கும் ஏற்றமுள்ள மொழி தமிழ்தான் . தமிழ் நாகரிகம் பெற்ற மொழி , மூடநம்பிக்கைகளைப் புறக்கணிக்கும் மொழி தமிழ் . வேறு மொழி புகுத்தப்பட்டு மக்கள் நலம் கெட்டு கேடு உண்டாகும் . தம...

ஆப்ரகாம்லிங்கன்

  ஆப்ரகாம்லிங்கன்             ஆப்ரகாம் லிங்கன் சாதாரண செருப்பு தைக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையோடு குடும்பத் தொழிலினை செய்தவர். தனது பட்டப் படிப்பிற்கு தேவையான புத்தகம் ஒன்று வாங்குவதற்காக மூன்று நாட்கள் ஏர் உழுது சம்பாதித்து புத்தகத்தை வாங்கியவர். சட்டக் கல்வி பயின்றவர். அரசியலில் ஆரம்பம் முதல் பல்வேறு தோல்விகளைக் கண்டவர்.           தோல்வியின் தடைகளையெல்லாம் கடந்து அரசியலில் மிக பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். தனது பதவியேற்பில் அவர் சொற்பொழிவு நிகழ்த்திய போது, எதிர்க்கட்சியில் உள்ள ஒருவர் இவரை அவமதிக்கும் எண்ணத்துடன் ”மிஸ்டர் லிங்கன், இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள் உங்கள் தந்தையார் தைத்துக் கொடுத்தவை தெரியுமா?” என்று ஏளனமாகக் கேட்டார்.           அவர் சொன்னதைக் கேட்டு பலரும் சிரித்தனர். ஆனால், லிங்கன் கோபம் கொள்ளவில்லை. மாறாக அவரது கண்ணிலிருந்து கண்ணீர் பெர...

தீபாவலி

  தீபாவலி           தென்தமிழ் நாட்டுமக்கள் கார்த்திகைத் திங்கள் முழுமதி இரவிலே விளக்குகளை வரிசை வரிசையாக வைத்து அவற்றின் ஒளிவடிவிலே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டு வணங்கி வருதல்போலவே, வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மக்கள் ஐப்பசித் திங்களில் விளக்குவரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்காநின்ற முழுமுதற் கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கிவருகின்றது. வடநாட்டவர் தென்னாட்டிற் குடியேறியபின் தீபாவலித் திருநாள் இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாய் இருத்தலால், அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக் குறியாகத் தீபாவலித் திருநாள் கொண்டாடப்படுகிறது என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனர் கட்டிவிட்ட தொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடம்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். இந்நிகழ்ச்சியை, இதற்கு முன்னம...

திருவண்ணாமலை – கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை – கார்த்திகை தீபம்           திருவண்ணாமலை, ஜோதி வடிவமாக நெருப்பாக சிவன் காட்சி தரும் மலை! இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். இறைவன் ஒருவனே என்ற ஒப்பற்றத் தத்துவத்தை விளக்கும் தலம் திருவண்ணாமலை திருத்தலம். திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். பத்தாம் நாள் மலையில்   பத்து நாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். பத்தாள் நாள் மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. முதலில் அண்ணாமலையாரின் கர்ப்பக்கிரகத்தில் கற்பூரம் ஏற்றப்படும். அந்த தீபத்திலிருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கிலிருந்து ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டம் ஐந்து விளக்குகள் பஞ்ச சக்திகள் என்னும் பஞ்ச மூர்த்திகள். பிறகு எல்லா தீபங்களும் கொடி மரம் அருகில் ஒன்றாக்கப்படும். இதை சர்வாலயதீபம் என்பார்கள். பெரிய அண்டாவில் நிறைய நெய்யை ஊற்றி பெரிய திரியை அதில் வைத்து தீபம் ஏற்றுவார்கள்.           திருவண்ணாமலை எண் கோண வடிவத்தில் இருக்கிறது. மலையைச் சுற்றி வரும் போது எட்டு மைல்...

சித்தர் பாடல்களில் உணவு குறித்த பழமொழிகள்

  சித்தர் பாடல்களில் உணவு குறித்த பழமொழிகள்             சித்தர்கள் வாழ்வில் சொல்லி வைத்த பழமொழிகள் ஈண்டு காணலாம். ·         பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பதால் மிளகுக்குரிய குணவியல்பினைக் காணலாம். ·         ”சிறு குழந்தை இல்லாத வீடும், சீரகம் இல்லாத உணவும் சிறக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளனர். ·         இஞ்சியின் மருத்துவ குணத்தை சித்தர்கள், ”காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு வந்தால் இளமையோடும் உடல் வனப்போடும் வாழலாம் என்று சித்தர்கள் பாடியுள்ளனர். ·         உடல் வலுவிற்கு ஏற்றது ‘எள்’ என்பதைப் புலப்படுத்தும் பழமொழி, ‘இளைத்தவன் எள் தின்பான்’ என்றும் ‘கொழுப்புள்ளவன் கொள் தின்பான்’ ·         சித்தர்கள் ருசியைக் கூடக் கண்டறிந்து காய்களிகளின் வழி அறிவித்துள்ளனர். இதனை, ”கத்திரிக்காய்க்கு காம்பில் ர...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...