மயில் & கான மயில் இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும். நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு...
மாளிகைகள் நம் முன்னோர்கள் மாட மாளிகைகள் வானுயர ஓங்கிய வண்ணம் எழுப்புவதில் கைவண்ணம் பெற்றிருந்தனர். கட்டப்பெறும் மாளிகைகளின் வாசல் வடக்கு நோக்கியோ, கிழக்கு பார்த்தோ இருக்குமாறு அமைத்தார்கள். இதனை, ”மாளிகை தனக்கம் மாநகர் வடகுணபால் கண்டு” என்று திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடுகின்றார். மாளிகைகளால் காற்றும் வெளிச்சமும் புழங்கும் வகையில் காலதர்களும் பருவத்திற்கு ஏற்ற வேனிற்பள்ளி கூதிப் பள்ளிகளும், நிலவுப் பயன் கொள்ளும் வேயா மாடங்களும் வைத்து வடிவமைக்கப்பட்டன. காலதர் என்பற்கு சாளரம், நேர்வாய்க்கட்டளை, புழை எனப் பல பெயர்கள் உள்ளன. சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டு எழிலுற அமைக்கப்பட்டிருந்ததை, ”மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண்” (சிலம்பு-2:22-23) சி...