மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
பழந்தமிழரும் விழாக்களும் ‘விழா’ என்று தோன்றியது என்பது வரையறைச் செய்ய இயலாது. தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத நிலையில் இயற்கைச் சக்தி மற்றும் கருவிகளின் செயற்பாட்டை மட்டுமின்றி, கனவுகள் தோற்றம் குறித்தும், பண்டைய மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அப்பொருள்களுக்கு மிகுதியான ஆற்றல் இருப்பதாக புராதன மனிதன் எண்ணினான். அவ்வாற்றலை வழிபடும் வகையில் ‘புனிதப் பொருள் வழிபாடு தோற்றம் பெற்றது என்பர். காலப் போக்கில் வழிபடும் பொருட்டு இயற்கை சக்திகளுக்கு உருவம் அளித்தான். அதனை மனிதனின் உருவாக்கக் கற்பனை என்பார் மானிடவியலார். இவ்வாறு தன் தேவைக்கும், மகிழ்ச்சிக்கும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் விழா நம்பிக்கைக்குரிய செயலாக வழக்கில் இடம் பெற்றது. தமிழர் விழாக்கள் நோன்பும், சடங்கும் இணைந்து செயற்படும் நிலையில் அமைவதாகச் சுட்டுவர். விழாக்களில் நோன்புச் செயலும், சடங்கும் ஒருமித்து இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அந்நிலையில் ப...