மயில் & கான மயில் இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும். நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு...
திராவிட மக்களின் விளையாட்டுக்கள் திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் பெற்றுள்ளன. மீதமுள்ள இருபது மொழிகளும் பேச்சு வழக்கை மட்டும் உடைய மலை சாதியினர் மொழிகள். மொழியில் ஒற்றுமை காணப்படுவதைப் போல திராவிடர்களின் பண்பாட்டிலும் விளையாட்டுக்களிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன. சடுகுடு ஆண்களால் ஆடப்படும் புறவிளையாட்டு. இதனை ஆடும்போது ‘சடு குடு’ என்னும் ஒலிக்குறிப்புத் தொடர் ஆளப்படுவதால் இவ்விளையாட்டு இப்பெயர் பெற்றது. இதனைத் தெலுங்கர் ‘பலிஞ்சப்பளம்’ என்று அழைப்பர். இந்தியாவில் உள்ள பட்டி தொட்டிகளில் எல்லாம் மணற்பாங்கான இடங்களில் விளையாடப்படுகிறது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டு பழந்தமிழர் போர் முறையான ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பதன் அடிப்படையில் சடுகுடு தோன்றியிருக்கல...