Skip to main content

Posts

Showing posts from February, 2023

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

திராவிட மக்களின் விளையாட்டுக்கள்

  திராவிட மக்களின் விளையாட்டுக்கள்           திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் பெற்றுள்ளன. மீதமுள்ள இருபது மொழிகளும் பேச்சு வழக்கை மட்டும் உடைய மலை சாதியினர் மொழிகள். மொழியில் ஒற்றுமை காணப்படுவதைப் போல திராவிடர்களின் பண்பாட்டிலும் விளையாட்டுக்களிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன. சடுகுடு           ஆண்களால் ஆடப்படும் புறவிளையாட்டு. இதனை ஆடும்போது ‘சடு குடு’ என்னும் ஒலிக்குறிப்புத் தொடர் ஆளப்படுவதால் இவ்விளையாட்டு இப்பெயர் பெற்றது. இதனைத் தெலுங்கர் ‘பலிஞ்சப்பளம்’ என்று அழைப்பர். இந்தியாவில் உள்ள பட்டி தொட்டிகளில் எல்லாம் மணற்பாங்கான இடங்களில் விளையாடப்படுகிறது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் விளையாடப்படுகின்றது.           இவ்விளையாட்டு பழந்தமிழர் போர் முறையான ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பதன் அடிப்படையில் சடுகுடு தோன்றியிருக்கல...

ஆடுபுலி ஆட்டம்

  ஆடுபுலி ஆட்டம்             நாட்டுப்புற வாழ்வியலின் ஒரு பகுதியாக நாட்டுப்புற விளையாட்டுக்கள் அமைகின்றன . தமிழத்தின் பல கிராமங்களில் இன்றும் மரபு விளையாட்டுக்கள் போற்றப்படுகின்றன . இவ்விளையாட்டுக்கள் உடல் வளர்ச்சிக்கும் உள்ள மலர்ச்சிக்கும் துணைபுரியும் . அறிவைக் கூர்மைப்படுத்தி ஆற்றலை வளர்க்கும் பயிற்சிக் களமாகத் திகழ்பவை . ஆடுபுலி ஆட்டம் தோற்றம்           ‘குறிஞ்சி நிலத்திற்கும், முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட இயற்கை வேட்டுவினைப் போராட்டம் விளையாட்டின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்’ என்று இரா. பாலசுப்பிரமணியன் கருதுகின்றார். உலகெங்கும் நாகரிகம் தோன்றி வளர்ந்த காலத்தில் மனித சமுதாயம் வீரயுகத்தில் இருந்தது. அடுதலும் தொலைதலும் அக்காலத்தில் புதிதன்று. தமிழகத்தில் வீர யுக காலக்கட்டத்தில் – ஆட்சி எல்லையை விரிவுபடுத்திக் குறுநில மன்னர்களை அடிமைப்படுத்தி மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்) பேரரசு அமைத்த காலகட்டத்தில், இச்சமூக அரசியற் பின்னணியில் ‘ஆடுபுலி ஆட்டம்’ தோன்றியிருக்கவே...

சங்க கால விளையாட்டுக்கள்

  சங்க கால விளையாட்டுக்கள்             சங்க கால தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினார்கள். வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைச் சார்ந்தே அவர்களின் தொழில் அமைந்திருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அவர்கள் இனக்குழு சமுதாய அமைப்பைப் பெற்றிருந்தமையால் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பிருந்தது. குழந்தைகளும் இளையோரும் முதியோரும் விளையாடி இன்புற்றனர். பல விளையாட்டுக்களை ஐந்திணை மக்களும் விளையாடினர். சில விளையாட்டுக்கள் குறிப்பிட்ட ஒரு திணைக்கே உரியதாக அமைந்திருந்தது. வட்டாட்டம்           தரையின் மேல் கிழிக்கப்பட்ட கட்டத்தில் அல்லது அரங்கத்தில் நெல்லி வட்டைப் போட்டு ஒரு கட்டத்திலிருந்து, மறு கட்டத்திற்குத் தள்ளி விளையாடுவர். குறிப்பிட்ட இடத்தை முதலில் அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆவர். இந்த விளையாட்டைப் பாலை நிலத்தில் வேப்ப மர நிழலில் கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறார் ஆடியதாக நற்றிணை (3.1-5) கூறுகின்றது. இவ்விளையாட்டுக்கு அரங்கு தேவை ...

சிற்பம் - படிமம்

  சிற்பம் - படிமம்   செப்புப் படிமம் செப்புப் படிமம் செய்வதன் ஆரம்ப நிலை மெழுகுப் படிமம் செய்வது. தேவையான உருவத்தை மெழுகில் செய்து அதன் மேல் மண் கலவையைப் பூசுவர். அது காய்ந்ததும் உட்பகுதி மெழுகை உருக்கி எடுப்பர். பின்னர் உள்ளீடற்ற மண் உருவினுள் உலோகங்களை உருக்கி ஊற்றுவர். உலோகம் ஆறியபின் மண்பகுதியை எடுத்து விடுவர். அந்த உலோக உருவத்தை அரத்தால் ராவிசீர் செய்வர். இது உலோக படிவம் செய்யும் முறையாகும். செப்புப் படிவத்தின்   ஐந்து படிநிலைகளாக, மெழுகு பிடித்தல், கருக்கட்டுதல், வார்த்தல், வெட்டி ராவுதல், தீர்மானம் செய்தல் ஆகியன. மெழுகின் வகைகள்           மெழுகு உருவத்தை உருவாக்க தேன்மெழுகு, குங்கிலியம், எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவர். தேன் மெழுகு என்பது வேட்டை மெழுகு எனப்படும். இது தேன் அடையிலிருந்து எடுக்கப்படுவது. குங்கிலியம் என்பது ஆச்சாமரத்தின் பால் அல்லது பிசின் ஆகும். இக்கலவைக்கு கடலை எண்ணெயைப் பயன்படுத்துவர். மெழுகுப் படிமத்தைச் செய்வதில் தான் சிற்பியின் கலை வண்ணம் வெளிப்படும். இதை தலைமைச் சிற்பியே உருவாக்குவர். ...

பழந்தமிழரின் உடல்வளக் கல்வி

  பழந்தமிழரின் உடல்வளக் கல்வி             ‘ விளையாட்டும் வினையாகும்’ என்பது தமிழரின் அனுபவப் பூர்வமான முதுமொழி. இவ்வினையைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்களும் இருந்துள்ளனர். சங்ககாலப் புலவர்களில் கடுவன் இளமள்ளனார், கடுவன் மள்ளனார், மதுரை அளக்கர் ஞாழார் மள்ளனார், ஆகிய புலவர்களின் பெயர்கள் மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றனர். இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும். சங்க மருவிய காலப் புலவர்களாகிய காரி ஆசானும் கணித மேதையும் தம் ஆசிரியரை ”மல்லிவர் தோள் மாக்காயர்” என்று போற்றுகின்றார். ஆகவே பழங்காலத்தில் இயற்றமிழும், உடல்வளக் கலையிலும் வல்லவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். களரி           தமிழில் உள்ள போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பழங்காலத்தில் பயற்சிக் கூடங்கள் உள்ளதைச் சுட்டுகின்றன. பட்டினப்பாலை முரண்களரியில் பட்டினப் பாக்கத்து மறவர்களும் மருவூர் பாக்கத்து மறவர்களும் சண்டை செய்ததைப் பற்றி விளக்குகின்றது(59-74). களரி என்னும் சொல் இன்றும் கேர...

உறவுமுறை பெயர்கள்

உறவுமுறை பெயர்கள்            ஒரு சமூகத்தில் மிக அடிப்படையான அமைப்பாக உறவுமுறை விளங்குகிறது . உறவுநிலை என்பது இரத்த வழி அமைகின்ற குடும்ப உறவில் தொடங்கி பின்னர்க் குடும்பங்களுக்கிடையே உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு , அதன் தொடர்பு வளர்த்து பல குடும்ப உறவுகளால் பின்னப்பட்டு , ஓர் இனக்குழு அமைப்பு முழுவதையும் உறவு முறையாக மாற்றிவிடும் சமூக வளர்ச்சியைக் காணலாம் . சமூகத்தில் உறவுமுறைகள்    ஒரு சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் , சாதிவேறுபாடுகளையும் , மதப்பிரிவுகளையும் உறவுமுறை பிரதி ப லிக்கின்றது . பொதுவாக, கிராமப்புற மக்களிடம் கணவன் மனைவியைப் ‘புள்ள’ என்று அழைப்பதும், மேல்தரச் சமூகத்தினரிடம் ‘டார்லிங்’, ‘ஹனி’ என்பதும், பெயர் சொல்லி அழைப்பதும் பொதுவாக காணப்படுகின்ற வழக்கமாகும். அது போன்றே கணவனை மச்சான், மாமா, அத்தான், டார்லிங் என்றும் சிலசமயங்களில் செல்லப் பெயரிட்டு அழைப்பதும் சமூகத்திற்கு ஏற்ப மக்களிடையே மாறுபட்டு அமைந்திருக்கின்றன.      ‘மன்னி’ என அண்ணியையும், ‘அத்திம்பேர்’ எனச் சகோதரியின் கணவனையும் அழைக்க...

அநுசூயா

  அநுசூயா   அத்திரி முனிவரின் பத்தினியே அநுசூயா , ‘ பொறாமை இல்லாதவள் ’ என்பது அவள் பெயரின் பொருள் . அவள் மிகவும் கற்புள்ளவள் என்று புகழப் பெற்றாள் . இதை உலகம் அறியச் செய்ய எண்ணினார் நாரதமுனி . இரும்பினால் செய்த கடலைகளை எடுத்துக்கொண்டு , பார்வதி தேவியிடம் போனார் . ” அம்மா ! இக்கடலைகளைத் தங்களால் வறுத்துத் தர முடியுமா ? ” என்று கேட்டார் . இவ்வாறு , சரசுவதி , இலக்குமி   ஆகிய இருவரிடமும் கேட்டார் . அவர் உள்ளக் கருத்தை அறிந்து கொண்ட முப்பெருந்தேவியர்களும் ‘ எங்களால் ஆகாது ’ என்று மறுத்துவிட்டனர் . நேரே அநுசூயையிடம் வந்தார் நாரதர் . அம்மா இந்த இரும்புக் கடலைகளை வறுத்துத் தர வேண்டும் என்றார் . கணவர் அத்திரி முனிவரின் நினைவுடன் , கற்பரசி அநுசூயா வாணலியிட்டு அவற்றை வறுத்துக் கொடுத்து விட்டாள் . அவற்றை எடுத்துச் சென்ற நாரதர் , ” பாருங்கள் , நீங்கள் வறுக்க முடியாது என்று விட்டதை வறுத்து விட்டாள் ஒருத்தி ” என்று லஷ்மி , சரஸ்வதி , பார்வதி ஆகிய மூவரிடமும் காட்டினார் . ” இக்கடலைகளை வறுத்தது யார் ?” என்று அவர்கள் கேட்டனர் . ” வேறு யார் ? கற்புக்கரசி அநுசூயா தான் !” என்...

திருப்பூர் குமரன்

  திருப்பூர் குமரன்           தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் குமரன் இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரையே ஈந்த தியாகச் செம்மலாக விளங்குகிறார். குமாரசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட திருப்பூர் குமரன் 1904 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் நாச்சிமுத்து கருப்பாயி அம்மாள். சென்னிமலையில் பிறந்து பள்ளிப்பாளையம் சென்று நெசவுத் தொழில் கற்று வந்தார். 14 வயதில் இராமாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய வாழ்க்கையில் வறுமையும், இன்னலும் வந்தது. அப்பொழுதே இறைப் பற்றுடையவராக விளங்கினார்.           ”சைவம் தழைக்கும் சென்னிமலையில் பிறந்த குமாரசாமி திருவாசகம் படித்தார். வீட்டிற்கு அருகே காமாட்சி அம்மன் கோயிலில் நண்பர்களோடு சனிக்கிழமை தோறும் பஜனை பாடுவார்” என்னும் வரிகளில் திருப்பூர் குமரனின் தெய்வ பக்தியை எடுத்துரைப்பர். வறுமையின் காரணமாக பிழைப்பதற்காக பெற்றோருடன் திருப்பூர் வந்தார். காந்தியடிகளின் சித்தாந்தம் அவருக்குப் பிடித்தது. எனவே கதர்   அணிந்தார். மனைவியையும் அணிய ச...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...