எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
மங்கையர் பருவம் என்பது செல்லப் பருவம் தாண்டி, அறிவு வளர்ந்த மங்கைப் பருவம் . இனியும் குழந்தையல்ல . அனைத்துக் குணநலன்களையும் கொண்டு Maturity அடைந்து வாழ வேண்டும் . பொறுப்பு . கடமை , உரிமை இவைகளை உணர்த்தும் விதமாக இச்சடங்குகள் செய்யப்படுகின்றன . தாய்மாமன் மூலம் இக்கௌரவம் வழங்கப்படுவதாக அமைகிறது . மஞ்சள் (Antiseptic), வேப்பிலையைப் போட்டு ஊறவைத்து அந்நீரால் குளிக்க வைப்பார்கள் . இலைகள் தலையில் விழாத வகையில் , ஆரோக்கியத்திற்கேற்ப செம்பு சல்லடை வைத்து அதன்வழி ஊற்றுவார்கள் . முதன்முதலில் ஊற்றும்போது அதில் நவமணிகளால் ஆன நகைகள் , தங்கம் , வெள்ளி என மருத்துவ குணங்கள் நிறைந்த நகைகளில் படுமாறு நீர் ஊற்றுவார்கள் . இதனை மஞ்சள் நீராட்டு விழா என்பர் . மேலும் உடலில் உள்ள மாறுதல்களின் விளைவைச் சமன் செய்ய புரதச்சத்து உணவுவகைகளைக் கொடுப்பார்கள் . காலையில் வெறும் வயிற்றில் முட்டை , நல்லெண்ணெய் , கொடுப்பார்கள் . உழுத்தங்களி . சிவப்பு புட்டரிசி , பருப்பு ...