மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
காப்பியங்களில் நங்கையரின் கற்பின் நிலைகள் ”காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின் அன்பரொடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர் (மணி.2) என்று மணிமேகலைப் பகுதியில் 1. கணவன் இறந்தான் என்றதும் மார்படைப்பால் மனைவி உயிர் விடுதல் உண்டு; 2. தீமூட்டிப் பாய்ந்து உயிர் விடுதல் உண்டு; 3. மறுபிறப்பிலும் அவனை அடையப் பெறுவானாக என்று கைம்மை நோற்றிருத்தல் உண்டு என்ற மூன்று நிலைகளை அறிகின்றோம். உடன் உயிர் விடுதலைத் தலையாய கற்பு எனவும், தீப்பாய்தலை இடையாய கற்பு எனவும், நோற்றிருத்தலைக் கடையாய கற்பு என்றும் கூறுவர். கணவன் இறந்தபின் மன...