Skip to main content

Posts

Showing posts from November, 2023

இளமையில் கல் நில்லாது செல்! (புத்தக மதிப்புரை)

  இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் .    அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் .   ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன்   குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும்   இந்நூலுக்கு   பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...

கீழ்க்கணக்கு நூல்களில் ‘நோய்’

  கீழ்க்கணக்கு நூல்களில் ‘நோய்’           ‘நோய்’ என்பது ‘ நொ ’ எனும் வேர் சொல்லாகும். இதற்கு அகராதி நொவ்வு, நோதல் என்று பொருள் தருகிறது. ஒன்றைத் தாக்கி நொய்மை அதாவது சிறுமை அடையச் செய்வதனால் ‘நோய்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. நோய் என்பது தளர்ச்சி, மெலிவு, துன்பம், வருத்தம், வியாதி, அச்சம், குற்றம், துக்கம், நோவு என்னும் பல பொருள்களிலும் வழங்கப்படுகிறது.           ‘பையுளும் சிறுமையும் நோயின் பொருள்’ (தொல்,சொல்.உரி.45) உடல் மற்றும் உள்ளத்தை வருத்துவது ‘ பையுள்’ எனவும் துன்பத்துடன் கூடிய உளநோயைச் ‘சிறுமை’ (பிணி) எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நோயென்பது எல்லா இடங்களிலும் இருப்பது என்பதை,           ”நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு           ஆவயின் வமூஉங் கிளவி எல்லாம்           நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது           காட்ட ...

அறிவுடையார் இயல்பு

  அறிவுடையார் இயல்பு                     ‘ எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடி கற்றோரை வருக’ என்பர் என்பது கற்றோருக்குக் கூறி சிறப்புரையாகும். கற்றவர்கள் என்னுங்கால் கல்வி, அனுபவம், கேள்வி, தன் உணர்வு ஆகியனவற்றை அறிந்தவர்கள் என்று கொள்ளுதல் சால்புடைத்தாகும். எல்லோருக்கும் இத்தகைய ஆற்றல் இருக்குமா எனில் ஐயமேயாகும்.           ‘கல்வி கரையில’ என்பது முன்னோர் வாக்கு. கல்விச் செல்வம் அவரவர்க்கு இயல்பாக வுள்ள அறிவினை மேலும் வளர்த்தற்குத் துணை புரிவதேயாகும். அறிவு பண்படுமென்றால் அதற்குக் கல்வியே கருவியாகும்.           கண்போன்று நெறி காட்டுவது கல்வியே. அத்தகைய கல்வி கற்றோரை எந்தச் சூழ்நிலையும் மாறுபட்ட வழிக்கு இழுத்துச் செல்லாது. மாறுபாடும் அவர்களிடம் ஒட்டி உறவாடாது. தாமரை இலைத் தண்ணீர் போன்று தன் நிலை திரியாதிருப்பதே கற்றவருக்கு உரிய பண்பாகும்.         ...

நல்லறம் ஒன்றே நற்றுணை!

  நல்லறம் ஒன்றே நற்றுணை !             நாடாண்ட புகழும் தேடிக் கொண்ட செல்வமும் உயிர்க்கு ஊதியமாகாது. செய்யும் நல்லறங்களின் பயனே இம்மைக்கும் மறுமைக்கும் இனிய துணையாகும்.   புறநானூறு – பா.எண், 357 பாடியவர் – புலவர் பிரமனார் திணை – காஞ்சி துறை – மறக்காஞ்சி, பெருங்காஞ்சி         ”குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்           பொதுமை சுட்டிய மூவர் உலகமும்           பொதுமை இன்ற ஆண்டிசி னோர்க்கும்           மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே           வைத்த நன்றே வெறுக்கை வித்தும்           அறவினை யன்றே விழுந்துணை அத்துணைப்           புணைகை வீட்டோர்க்கு அரிதே துணையழத்           தொக்குயிர் வௌவும் காலை         ...

ஆள்பவர் சரியானால் ஆளும் நாடும் நலம் பெறும்!

  ஆள்பவர் சரியானால் ஆளும் நாடும் நலம் பெறும்!           அரசனை தேர் அல்லது வண்டியைச் செலுத்துபவனாகவும் நாட்டைத் தேர் அல்லது வண்டியாகவும் உவமித்துள்ள சிறப்பு எண்ணி இன்புறத்தக்கது.   புறநானூறு பாடல் எண் – 185 திணை – பொதுவியல் துணை பாடியவர் – தொண்டைமான் இளந்திரையன்         ”கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்           காவற் சாகாடு உகைப்போன் மாணின்           ஊறின்று ஆகி ஆறினிது படுமே           உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்           பகைக்கூழ் அள்ளற் பட்டு           மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே”           உருளையும், அச்சையும் சேர்த்து, உலகத்தில் செலுத்துகிற நல்ல சகடம், அதை ஓட்டுகிறவன் செம்மையாக இருந்தால், அது ஓடுவது ஒழுங்காக இருக்கும்...

கூடிப் பிரியேல்!

  கூடிப் பிரியேல்!               மனிதன் தன் அறிவின் ஆற்றல், அளவு, திட்பம், வலிமை, செயல் ஆகிய அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்ஙனம் அறிதலால் அவன் ஏற்கப் போகும் பணியும் அதன் மாண்பைப் பெறும்.           தீயனவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். எவை எவை தீயன என்பது தெரிந்தால் அவற்றை இனம் கண்டு புறந்தள்ள ஏதுவாக இருக்கும்.           அறிவே மனிதனுக்கு ஆன்ற துணை. அடக்கமே அவனை உயர்த்தும் ஏணி. ஆற்றலைப் பெருக்கி, சான்றோனாக்கி, சென்ற இடமெல்லாம் சிறப்பைச் சேர்ப்பது, ஆக்கம் அளிப்பது எல்லாம் அறிவினால் தான் நமக்கும் கிட்டும். ஆக்கம் இன்புற்று வாழப் பயன்படுகிறது. அறவழி ஆக்கம் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். நிலைத்த இன்பத்தையும் கொடுக்கும். உழைப்பை நல்கி ஊதியம் பெறுதல் உரிமையின் விழுப்பமன்றோ?         கூடிப் பிரியேல் என்ற ஔவையின் வாக்கிற்கிணங்க,  நம்பிக்கை என்பது நட்பின் காரணமாக ஏற்படுகிறது. நம்பினவரே கைவிட்டால் நம்மவர், நம்மோர் என்று இல்லாத...

இலக்கியத்தில் கருவுற்றப் பெண்களைப் பற்றிய குறிப்புகள்

                  இலக்கியத்தில் கருவுற்றப் பெண்களைப் பற்றிய குறிப்புகள்             கருவுற்றப் பெண்களின் வயிற்றில் ஐதுமயிர் (பொருநர் ஆற்றுப்படை 6-7) என்ற ஒரு வகை முடி காணப்படும் என்றனர். இவர்கள் மண்ணையும் புளிப்புச் சுவையுடைய பொருள்களையும் விரும்பி உண்பர் என்பதனை,           ”......  ...... நின்நாட்டு         வயவுறு மகளிர் வேட்டுவனின் அல்லது         பகைவர் உண்ணா அருமண்ணினையே” (புறம்.20:13-15) என்ற புறநானூற்றுப் பாடல் பகுதியால் அறியலாம். ஆடவனுடைய உயிரணு காரத் தன்மையுடையது (Alkaline by nature) என்றும் அது பெண்ணின் முட்டையோடு சேரும்பொழுது அதனை நடுநிலையாக்கவே கருவுற்ற பெண்கள் புளிப்பு, உப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய பொருள்களை விரும்பி உண்கின்றனர் என்றும் கூறுவர். உயிர் ஊக்கிகளின் (Hormones) சேர்க்கையால் வேதியியல் மாறுபாடு பெண்ணின் உடலமைப்பிலும் உள்ளத்தின் போக்கிலு...

சீரழிக்கும் சினம்

    சீரழிக்கும் சினம்           விழுமிய அறிவுடையவர்கள் சினம் கொள்ள மாட்டார்கள். சினத்தால் உண்டாகும் துன்பங்கள் எவை எவை என்பதையும், அவற்றின் தன்மைகளையும் அவர்கள் நன்கு அறிந்தவர்கள். சினம் அவர்களிடம் வந்தாலும் ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடும் சினத்திற்குத் தம்மை அடிமையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.           வெகுளுதல், கோபப்படுதல், சினத்தல், சீறல் என்பன ஒருபொருட் சொற்கள் என்றாலும் உள்ளார்ந்து இவற்றைப் பார்க்குமிடத்து அக்கோபத்திற்குள்ள இயல்புகளை அச்சொற்கள் ஒவ்வொன்றின் மூலம் அறியலாம்.           வெகுளுதல் – உள்ளத்தால் உள்ளுதலால் வெளிப்படுவது வெகுளுதலாகும்.         கோபப்படுதல் – குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதால் குற்றங்கள் மிகுதலைக் காணுவதால் வருவது கோபப்படுத்தலாகும்.         சினத்தல் – சிறுமைக்குணத்தால் ஏற்படுதலாகும். விம்மி வரும் தன்மையது.      ...

வீரத் தாய்

  வீரத் தாய்             இப்பாடல் வீரனைப் பெற்ற வயிறு புலியிருந்த குகையென்று வருணிக்கும் பாடல். காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் பாடியது. புறநானூறு, பாடல் எண் – 86 பாடியவர்- காவற்பெண்டு திணை – வாகை துறை – ஏறாண் முல்லை         ”சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்           யாண்டு உளனோஎன வினவுதி? என்மகன்           யாண்டுஉள னாயினும் அறியேன்! ஓரும்           புலி சேர்ந்து போகிய கல்லளை போல           ஈன்ற வயிறோ இதுவே           தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!”           என்னுடைய இச்சிறிய வீட்டின் வாசலில் வந்து தூணைப் பிடித்தபடி நின்று கொண்டு, ‘உன் மகன் எங்கே’ என்று கேட்கிறாயே! என் மகன் எங்கே போயிருக்கிறான்? எனக்கே தெரியாது. நான் அறியேன்! ஆன...

பழந்தமிழ் இலக்கியங்களில் கதிரவன்

  பழந்தமிழ் இலக்கியங்களில் கதிரவன்         தமிழ் நிலவுடனும் , கதிருடனும் , விண்ணுடனும் , மேகத்துடனும் , கடலுடனும் , பிறந்ததாகவும் , அத் தமிழ்மொழியைப் பேசும் தமிழர் உலகின் பழமையான திங்கள் , கதிரவன் , வானம் நட்சத்திரம் , கடல் , மேகங்கள் இவை போன்று பழமை வாய்ந்தவர்கள் என்றும் புலப்படுத்திப் பேசுகின்றனர் .           ” திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்                 விண்ணோடும் உடுக்களோடும்           மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த                 தமிழோடும் பிறந்தோம் நாங்கள் ”                                         ( பாரதிதாசன் கவிதைக...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...