இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் . அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் . ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...
கீழ்க்கணக்கு நூல்களில் ‘நோய்’ ‘நோய்’ என்பது ‘ நொ ’ எனும் வேர் சொல்லாகும். இதற்கு அகராதி நொவ்வு, நோதல் என்று பொருள் தருகிறது. ஒன்றைத் தாக்கி நொய்மை அதாவது சிறுமை அடையச் செய்வதனால் ‘நோய்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. நோய் என்பது தளர்ச்சி, மெலிவு, துன்பம், வருத்தம், வியாதி, அச்சம், குற்றம், துக்கம், நோவு என்னும் பல பொருள்களிலும் வழங்கப்படுகிறது. ‘பையுளும் சிறுமையும் நோயின் பொருள்’ (தொல்,சொல்.உரி.45) உடல் மற்றும் உள்ளத்தை வருத்துவது ‘ பையுள்’ எனவும் துன்பத்துடன் கூடிய உளநோயைச் ‘சிறுமை’ (பிணி) எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நோயென்பது எல்லா இடங்களிலும் இருப்பது என்பதை, ”நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு ஆவயின் வமூஉங் கிளவி எல்லாம் நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட ...