மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
புலிப்பல் தாலி ‘புலியின் பல்லைக் கோர்த்து செய்த கழுத்தணி எனவும் பொன்னுடைத் தாலி’ என்றும், ‘பொன்னோடு புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’ என்றும் அழைக்கப்பட்டது. வீரத்தின் விளைவாக பெறும் புலிப்பல்லைப் பச்சிளம் சிறுவர்கட்கு அணிவித்தமை, வீரத்தை இளமையிலேயே உணரும் உணர்வைத் தூண்டுதல் என்ற வகையினிடம் பெற்றிருந்தது. சிறுவர், சிறுமியர் இருபாலருக்கும் புலிப்பல் தாலி அணிவிக்கும் வழக்கம் பண்டை குறிஞ்சி நில மக்களாகிய கானவரிடையே நிலவிய ஒன்று. புலிப்பல் பெற்ற முறையைச் சிலப்பதிகாரம், ”மறங்கொள்வயப் புலி வாய்பிளந்து பெற்று மாலை வென் பற்றாலி நிரை பூட்டி” என்று வீரமிக்க வலிய புலியை கிழித்துப் பெற்றமை விளக்கப்பட்டுள்ளது. வேட்டையாடிப் பெற்ற புலிப்பல் வீரத்திலன் விளைவால் கிடைத்தப் பொருள். எனவே வீரத்தின் அறிகுறியாகத் தம் மக்களுக்கு அணிவித்தவர் என்பதும் புலனாகிறது. பெரியபுராணத்தில், ”ஆண்டெதிர் அணைந்து செல்ல விடும் ...