திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
தேவலோக மூலிகை வெற்றிலை வெற்றிலை ஒரு மங்களகரமான தெய்வீக மூலிகை. கோயில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும், சுப நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் புனிதக் கலசங்களில் கூட மாவிலையும் வெற்றிலையும் மங்கலப் பொருட்களாக வீற்றிருக்கும். திருமணம் போன்ற புனிதக் காரியங்களில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாய் நம் வீடுகளுக்கு வரும் விருந்தினரை நன்கு உபசரித்து, விருந்தளித்து, கடைசியில் வெற்றிலையுடன் தாம்பூலம் தந்து, பிரியாவிடை கொடுத்தனுப்பவது நமது பழக்கம். மங்களகரத்தின் மறுசொல் வெற்றிலை என்றே சொல்லலாம். வெற்றிலையை தாம்பூலமாக உபயோகிக்கும்போது, அதனுடன் பார்க்கும் சுண்ணாம்பும் சேரும். தாம்பூலம் போடும்போது வெற்றிலையின் காம்பு, நுனி, வெற்றிலையின் நடு நரம்பு ஆகியவற்றை நீக்கியே உபயோகிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை மெல்லும்போது வாயில் முதலில் ஊறும் நீர் ...