மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
தேவலோக மூலிகை வெற்றிலை வெற்றிலை ஒரு மங்களகரமான தெய்வீக மூலிகை. கோயில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும், சுப நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் புனிதக் கலசங்களில் கூட மாவிலையும் வெற்றிலையும் மங்கலப் பொருட்களாக வீற்றிருக்கும். திருமணம் போன்ற புனிதக் காரியங்களில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாய் நம் வீடுகளுக்கு வரும் விருந்தினரை நன்கு உபசரித்து, விருந்தளித்து, கடைசியில் வெற்றிலையுடன் தாம்பூலம் தந்து, பிரியாவிடை கொடுத்தனுப்பவது நமது பழக்கம். மங்களகரத்தின் மறுசொல் வெற்றிலை என்றே சொல்லலாம். வெற்றிலையை தாம்பூலமாக உபயோகிக்கும்போது, அதனுடன் பார்க்கும் சுண்ணாம்பும் சேரும். தாம்பூலம் போடும்போது வெற்றிலையின் காம்பு, நுனி, வெற்றிலையின் நடு நரம்பு ஆகியவற்றை நீக்கியே உபயோகிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை மெல்லும்போது வாயில் முதலில் ஊறும் நீர் ...